கட்டாயம் வேண்டும் ஒரு நாள் பகல் 10 மணிக்குச் சென்னை பிரபாத் டாகீஸ் அருகே நின்று கொண்டு, சைனா பசாருக்குச் செல்லும் டிராம் வண்டியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். என் எதிரே சிறுவன் ஒருவன் ஓடிவந்து “அய்யா!” என்றான். அவன் வயது பன்னிரண்டு இருக்கும். மேலே கிழியாத சட்டை; கீழே கிழிந்த துண்டு; இரண்டும் அவ்வளவாக அழுக்குப் படவில்லை. மெலிந்த உடல்; ஆனாலும் நலம் கெடவில்லை; முகத்தில் ஒருவகை மலர்ச்சி; கண்களில்…
-
-
திராவிட தேசங்களை வென்ற செருக்கு! வழுக்கியாற்றை வேடிக்கை பார்க்க போய் புத்தூர் நம்பியிடம் பிடிபட்ட பார்பனர்கள் பற்றிய செய்திகள் எதுவும் வெளி உலகிற்கு தெரியவில்லை. ஒரு மாளிகையில் கைதிகளாக ஆனால் போதிய வசதிகளோடு தடுத்து வைக்கப்பட்டார்கள். இனி தொடர்ந்து பிடிபடப்போகும் பார்பனர்களுக்கும் சேர்த்து பெரிய அளவில் சில கரந்துறை காப்பகங்கள் பாக்கியத்தம்மாளின் ஆலோசனைப்படி புத்தூர் நம்பியால் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தது. பாலாவோரை மக்களை ஆழம் பார்க்கவென கிளம்பிய பல பார்ப்பனர்கள் திடீர்…
-
தோல் நோய் போக்கும் கஸ்தூரி மஞ்சள் * பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்றுநேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கரப்பான் புண்கள் விரைவில் குணமாகும். * கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள்செய்து துணியில் சலித்து எடுக்க வேண்டும். இதில் ஐந்து குன்றிமணி அளவு தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள், மற்றும் வயிற்று வலி ஆகியவை குணமாகும். கஸ்தூரி மஞ்சள் –…
-
உலகை உலுக்கிய கடற்கொள்ளைக்காரிகள் 1720 ஆம் ஆண்டின் கோடைக்காலம் அது. கடற் கொள்ளையருக்கு சொந்தமான ரிவெஞ்ச் என்ற அந்தக் கப்பல் கடல் நடுவே பயணித்துக் கொண்டிருந்தது. கப்பலின் வளைவுப் பகுதியில் ஆனி போனி நின்றிருந்தாள். அழகிய சுருளான செம்பட்டை முடி காற்றில் பறந்தது. பேண்ட்டும் கோட்டும் அணிந்து ஒரு ஆணாகவே மாறியிருந்தாள். தலையில் ஒரு கைக்குட்டையை கட்டியிருந்தாள். ஏதெனும் கப்பல் தெரிகிறதா என்று வேவு பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு ஆணைப்…
-
பாடாய் படுத்திய மீனும், நாட்டுக் கோழியும்! மீனையோ, கறியையோ குழம்பு வைத்து சாப்பிடுவார்கள். அல்லது வறுத்து சாப்பிடுவார்கள். இதுதான் எனது சின்ன வயதில் பார்த்திருக்கிறேன். இப்போ என்னடானா எது மீன், எது கோழி, எது ஆட்டுக்கறினு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு விதவிதமா சமைச்சு தர்றாங்க. அந்த வெரைட்டியைப் பத்தி தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடி, என்னோட அசைவ உணவு அனுபவம் குறித்து கொஞ்சம் சொல்றேன். என் வீட்டில் அப்பாவுக்கு ஆட்டுக்கறி மட்டும்தான் பிடிக்கும்.…
-
இன்று Enforcement Directorate (அமலாக்கத்துறை) என்றவுடன் ஒவ்வொருவரின் நினைவுக்கும் வருவது என்னவென்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை. சமீபத்தைய அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதை தொடர்ந்து இன்று இதைப்பற்றி பேசாதவர்கள்தான் குறைவு. சரி, இந்த துறையின் வரலாறுதான் என்ன..? இந்தியா சுதந்திரம் அடைந்த1947-ஆம் ஆண்டே சட்டமாக்கப்பட்ட “அந்நிய செலாவணி ஒழுங்குமுறை சட்டம்” (Foreign Exchange Regulation Act – FERA) பொருளாதார விவகாரங்கள் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இந்த சட்டத்தை சரிவர…
-
ரீமிக்ஸ் ஆன்மிக வியாபாரம் சமணம், பௌத்தம், மற்றும் ஏராளமான சிறிய பெரிய வழக்கொழிந்து போய்விட்ட சமயங்கள் சார்ந்த கோட்பாடுகள் எல்லாம் தற்போது இந்து சமயம் என்ற பெயரில் இருக்கிறது. நவீன விஞ்ஞான உலகத்துக்கு சமய நம்பிக்கைகள் மீது ஒரு அவநம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கை இருப்பதாக பாவனை பண்ணும் பலருக்கும் சந்தேகங்கள்தான் அதிகமாக இருக்கிறது, ஆனால் நடித்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் இல்லாமல்…
-
புத்திமான் பலவான்? புத்துவெட்டூர் நம்பி படுவேகமாக தனது நம்பிக்கைக்கு உரியவர்களை அழைத்து ஒரு ஆலோசனை குழுவை அமைத்தான். பேராவூருக்கும் பாலவோரைக்கும் ஏற்படவிருக்கும் ஆபத்து பற்றி விளக்கமாக எடுத்துரைத்தான். ஏற்கனவே பாக்கியத்தம்மாளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை பற்றி விளக்கினான். பாக்கியத்தமாளின் புத்திசாலித்தனதால் தாங்கள் எதிரி என்று கருதக்கூடிய குலதிலகனின் நம்பிக்கையை பெற்று விட்டோம். அத்தோடு .பார்ப்பனர்களின் அசைவுகள் அத்தனையும் தங்கள் பார்வையிலேயே நடைபெறுகின்றன என்றும் புத்தூர் நம்பி கூறினான். மௌன யுத்தம் ஆரம்பம்.…
-
வரலாற்றை பறைசாற்றும் அரிதான புகைப்படங்களையும் அவை சொல்லும் கதையையும் இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்… விமானப் பணிப்பெண்ணின் குட்டை உடை 1959ஆம் ஆண்டு வாக்கில் ஸ்வீடன் விமானங்களில் பணிபுரிந்த விமானப் பணிப்பெண்கள் மிகக்குறைவான உடையுடன் பணிபுரிந்திருக்கிறார்கள். அப்படி ஒரு பணிப்பெண்ணின் உடையை மற்றொரு விமானப் பணிப்பெண் ஆச்சரியத்துடன் பார்க்கிறார். வீடு திரும்பும் வீரர்களுக்கு வரவேற்பு வியட்னாம் யுத்தத்தில் படுதோல்வியைச் சந்தித்து அமெரிக்க வீரர்கள் நாடு திரும்பத் தொடங்கினார்கள். 1970களில்…
-
வானியலில் மேற்கொண்ட சிறப்பான ஆய்வுகள் மூலம், 17ஆம் நூற்றாண்டில் அறிவியல் புரட்சியை ஏற்படுத்தியவர் ஜோகன்னஸ் கெப்லர். அவரது ஆய்வுகளில் முக்கியமானது கோளியக்கத்தில் மூன்று விதிகள். அவர் குறித்து மேலும் பல தகவல்களை அறிந்துகொள்வோம். * ஜோகன்னஸ் கெப்லர், 1571 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி பிறந்தார். வானியல் நிபுணராகவும், கணித மேதையாகவும் 1630 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி இறந்தார். *…















