சலீல் சௌத்ரி செத்த பாம்பு திரும்பி அடிக்க கூடாது அப்படின்னு விட்டதுதான் இளையராஜா கங்கை அமரன் விஷயம். அதனால்தான், திரும்பவும் ஆர்எஸ்எஸ் துணையோடு வாய்க்கொழுப்போடு பேசி இருக்கிறார் கங்கை அமரன். இவர்களை ஆளாக்கிவிட்ட விடுதலைப்போராட்ட வீரர் ஐ.மாயாண்டி பாரதியிடம் நான் பேசி இருக்கிறேன். அவர் சொன்ன அனைத்தையும் இங்கே சொல்ல முடியாது , இளையராஜா, சலீல் சவுத்ரியிடம் உதவியாளராக வேலை செய்த போதுதான் அவருக்கு இசை என்னவென்று கற்றுக் கொடுக்கப்பட்டது.…
-
-
பெரியாரை உயிராய் காத்த மணியம்மை ”பெரியார் செத்துக் கொண்டிருந்தார். தமிழர் அழுது கொண்டிருந்தார்கள். ஆனால் பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்து போக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரைப் போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு. ஒன்று அவரின் பெருந்தொண்டு; மக்கள்மீது அவர் வைத்திருந்த அருள் மற்றொன்று. ஆயினும், காற்றிறங்கிப் பொதிமாடு போல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒருபால் ஒட்டிய குறியினின்று முன்னறிவிப்பு இன்றிப் பெருகும்…
-
இந்தியாவின் வீரப்பெண்மணி இந்திரா துப்பாக்கி ரவைகளால் சல்லடைக் கண்களாகத் துளைக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்ட 35 ஆவது நினைவுதினத்தை பின்னுக்குத் தள்ளும்வகையில், அந்த நாளை திசைதிருப்பும் வகையிலேயே படேலின் பிறந்தநாளை முன்னிறுத்துகிறது பாஜக. மேக் இந்தியா என்ற கோஷத்தை அறிமுகப்படுத்திய மோடி, இந்தியாவை ஒருங்கிணைத்ததாக புகழ்கிற படேலின் சிலையை செய்து ஒருங்கிணைக்க சீனாவின் உதவியை நாட வேண்டியதாயிற்று. 33 மாதங்களில் 182 மீட்டர் உயரத்துக்கு இந்தச் சிலையை நிறுவியிருப்பதாக மோடி…
-
(02-02-2019 அன்று நக்கீரனில் நான் எழுதிய கட்டுரை இது..) நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில் யாரும் எதிர்பார்த்திராத ஆயுதத்தை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. புராணங்களில் இத்தகைய இறுதிக்கட்ட ஆயுதத்தை பிரம்மாஸ்திரம் என்பார்கள். நீண்ட காலமாகவே பிரியங்கா காந்தியை தீவிர அரசியலுக்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் கட்சிக்குள் மட்டுமின்றி, பாஜக எதிர்ப்பாளர்கள் மத்தியிலும் இருந்து வந்தது. ஆனால், ராகுல் காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸை வளர்க்கும் முடிவில் சோனியா…
-
கொல்லப்பட்ட கௌரி லங்கேஷுடன் நண்பர் பிரகாஷ் ராஜ்… இவருடைய கொலையைத் தொடர்ந்தே, மோடி அரசை கடுமையாக எதிர்த்து வருகிறார் பிரகாஷ் ராஜ். என்ன செய்யக் காத்திருக்கிறது காவித் தீவிரவாதம்?எதிர்க்கருத்துக்கு பதில் துப்பாக்கிக் குண்டுகளா? செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி. பெங்களூருவில் உள்ள தனது வீட்டின் முன் சுடப்பட்டு இறந்து கிடந்தார் கௌரி லங்கேஷ். ஹெல்மட் அணிந்த இருவர் மோட்டார் சைக்கிளில் அவர் வீட்டு முன் நிற்பதையும், பின்சீட்டில் அமர்ந்திருந்தவர் கௌரி…
-
ஐன்ஸ்டீன் கோட்பாடு தவறாகிறதா? நமது பிரபஞ்சத்தின் ரகசியத்தை அம்பலப்படுத்திய பேரண்ட வெடிப்புக் கோட்பாடு இப்போது கேள்விகுறியாகி இருக்கிறது. 1905 ஆம் ஆண்டு மக்கள் விஞ்ஞானி என்று அழைக்கப்படும் ஐன்ஸ்டீன் இந்தக் கோட்பாட்டை முன்வைத்தார். E=mc2 என்ற அவருடைய கோட்பாடு நமது பிரபஞ்சம் உருவான விதத்தை மிக எளிமையாக விளக்கியது. நமது பிரபஞ்சத்தில் ஒளியைக் காட்டிலும் வேகமாக பயணிக்கக் கூடிய வேறு எதுவும் இல்லை என்று அவர்தான் சொன்னார். உலகம் இதுவரை…
-
இந்திரா குடும்பத்தினருக்கு துணிச்சல் புதிதல்ல. இந்திராவையே ஜவஹர்லால் நேரு துணிச்சலாகத்தான் வளர்த்தார். தாயில்லாத இந்திராவை விட்டுவிட்டு நேரு சிறையில் வாடியிருக்கிறார். இந்திராவும்கூட சிறுவயதிலேயே தன் வயது பிள்ளைகளை சேர்த்துக்கொண்டு விடுதலைப்போராட்டத்தில் பிரச்சாரம் செய்திருக்கிறார். வானர சேனை என்ற பெயரில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கு உதவி செய்திருக்கிறார். தந்தையின் செயலாளராக உலகைச் சுற்றி வந்திருக்கிறார். அமைச்சராகவும், பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்படும் அளவுக்கு மூத்த தலைவர்களுக்கு பிடித்தமாதிரி நடந்திருக்கிறார். பிரதமரான சமயத்தில் மூத்த தலைவர்களின்…
-
அன்பின் வழி காட்டும் அழகிய நாள், உலகம் முழுதும் உறவாடும் பெருநாள் நாள், ஈகையின் இசை பாடும் இனிய நாள், அதுவே ஈகைத் திருநாள்… சிரிப்பின் மொழியில் செல்வங்கள் பரிமாற, இன்ப வெள்ளத்தில் இதயங்கள் நீந்தும். தன்னலம் கரைய தானம் சிறகு விரிக்க, மனிதம் மகிழ்ந்து கொண்டாட்டத்தில் நிறைந்திடும். கொடையின் சூரியன் உதயமாக, இல்லம் தோறும் இன்பம் பரவும். விண்ணில் விதைக்கும் நன்மை விருட்சமாக, கருணையின் கொடையில் நெஞ்சம் பேரின்பமாகும்.…
-
நண்பன் பிரபா திருச்சியிலிருந்து சென்னைக்கு காலை வந்ததும் வழக்கம்போல் அறைக்குத்தான் வந்திருந்தான் இன்று. வந்தவன் கடந்த ஒரு மாதகாலமாக child protection task force உடன் இனைந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகம் மற்றும் அதில் வளரும் குழந்தைகள் பற்றிய ஆய்விற்காக அமைக்கப்பட்ட குழுவோடு வேலைச் செய்த தனது அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டிருந்தான். அப்போது திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் இருபதுக்கும் மேலான காப்பகங்கள் “இந்து சேவா” அமைப்புகள்…
-
திமுக தலைவர்கள் சாதி வேறுபாடுகளை எதிர்த்து பகிரங்கமாக பேசினார்கள்… இப்போதும் பேசுகிறார்கள்… கல்வியும் வேலையுமே சாதி ஒழிப்பின் அடிப்படை என்ற தந்தை பெரியாரின் கோட்பாடை திமுக தலைவர்கள் இன்றும் வலியுறுத்துகிறார்கள்… அதற்கான சட்டபூர்வ, நிர்வாக ரீதியான நடவடிக்கைகளில் தொடர்ந்து செயல்படுகிறார்கள்… படிப்பு மட்டுமே யாராலும் பறிக்க முடியாத சொத்து என்பதை மேடைதோறும் திமுக தலைவர்கள் வலியுறுத்துகிறார்கள்… இவற்றை தங்கள் மேடைகளில் வலியுறுத்தும் தலைவர்கள் யார் என்று பகுத்தறிந்தால் இளைஞர்களுக்கு…









