ஐன்ஸ்டீன் கோட்பாடு தவறாகிறதா? நமது பிரபஞ்சத்தின் ரகசியத்தை அம்பலப்படுத்திய பேரண்ட வெடிப்புக் கோட்பாடு இப்போது கேள்விகுறியாகி இருக்கிறது. 1905 ஆம் ஆண்டு மக்கள் விஞ்ஞானி என்று அழைக்கப்படும் ஐன்ஸ்டீன் இந்தக் கோட்பாட்டை முன்வைத்தார். E=mc2 என்ற அவருடைய கோட்பாடு நமது பிரபஞ்சம் உருவான விதத்தை மிக எளிமையாக விளக்கியது. நமது பிரபஞ்சத்தில் ஒளியைக் காட்டிலும் வேகமாக பயணிக்கக் கூடிய வேறு எதுவும் இல்லை என்று அவர்தான் சொன்னார். உலகம் இதுவரை…
-
-
இந்திரா குடும்பத்தினருக்கு துணிச்சல் புதிதல்ல. இந்திராவையே ஜவஹர்லால் நேரு துணிச்சலாகத்தான் வளர்த்தார். தாயில்லாத இந்திராவை விட்டுவிட்டு நேரு சிறையில் வாடியிருக்கிறார். இந்திராவும்கூட சிறுவயதிலேயே தன் வயது பிள்ளைகளை சேர்த்துக்கொண்டு விடுதலைப்போராட்டத்தில் பிரச்சாரம் செய்திருக்கிறார். வானர சேனை என்ற பெயரில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கு உதவி செய்திருக்கிறார். தந்தையின் செயலாளராக உலகைச் சுற்றி வந்திருக்கிறார். அமைச்சராகவும், பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்படும் அளவுக்கு மூத்த தலைவர்களுக்கு பிடித்தமாதிரி நடந்திருக்கிறார். பிரதமரான சமயத்தில் மூத்த தலைவர்களின்…
-
அன்பின் வழி காட்டும் அழகிய நாள், உலகம் முழுதும் உறவாடும் பெருநாள் நாள், ஈகையின் இசை பாடும் இனிய நாள், அதுவே ஈகைத் திருநாள்… சிரிப்பின் மொழியில் செல்வங்கள் பரிமாற, இன்ப வெள்ளத்தில் இதயங்கள் நீந்தும். தன்னலம் கரைய தானம் சிறகு விரிக்க, மனிதம் மகிழ்ந்து கொண்டாட்டத்தில் நிறைந்திடும். கொடையின் சூரியன் உதயமாக, இல்லம் தோறும் இன்பம் பரவும். விண்ணில் விதைக்கும் நன்மை விருட்சமாக, கருணையின் கொடையில் நெஞ்சம் பேரின்பமாகும்.…
-
நண்பன் பிரபா திருச்சியிலிருந்து சென்னைக்கு காலை வந்ததும் வழக்கம்போல் அறைக்குத்தான் வந்திருந்தான் இன்று. வந்தவன் கடந்த ஒரு மாதகாலமாக child protection task force உடன் இனைந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகம் மற்றும் அதில் வளரும் குழந்தைகள் பற்றிய ஆய்விற்காக அமைக்கப்பட்ட குழுவோடு வேலைச் செய்த தனது அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டிருந்தான். அப்போது திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் இருபதுக்கும் மேலான காப்பகங்கள் “இந்து சேவா” அமைப்புகள்…
-
திமுக தலைவர்கள் சாதி வேறுபாடுகளை எதிர்த்து பகிரங்கமாக பேசினார்கள்… இப்போதும் பேசுகிறார்கள்… கல்வியும் வேலையுமே சாதி ஒழிப்பின் அடிப்படை என்ற தந்தை பெரியாரின் கோட்பாடை திமுக தலைவர்கள் இன்றும் வலியுறுத்துகிறார்கள்… அதற்கான சட்டபூர்வ, நிர்வாக ரீதியான நடவடிக்கைகளில் தொடர்ந்து செயல்படுகிறார்கள்… படிப்பு மட்டுமே யாராலும் பறிக்க முடியாத சொத்து என்பதை மேடைதோறும் திமுக தலைவர்கள் வலியுறுத்துகிறார்கள்… இவற்றை தங்கள் மேடைகளில் வலியுறுத்தும் தலைவர்கள் யார் என்று பகுத்தறிந்தால் இளைஞர்களுக்கு…
-
கார்ப்பரேட்டுகளின் பினாமி அரசு! இப்பொழுது அமலுக்கு வந்துள்ள ஜிஎஸ்டியில் ஒரே வரிவிகிதம் என்பது இல்லை. பல்வேறு வரி விகிதங்கள் உள்ளன. அதாவது, 0சதவீதம், 5சதவீதம், 12சதவீதம், 18சதவீதம், 28சதவீதம் என்று வரிவிகிதங்கள் இருக்கின்றன. மிக முக்கிய அம்சம் என்னவென்றால் மாநிலங்களின் உரிமைகள் அப்பட்டமாக பறிக்கப்படுகின்றன. இன்றைய சூழலில் சில வரிவிகிதங்களை ஜிஎஸ்டி கவுன்சில் நிர்ணயித்துள்ளது. மாநிலங்கள் ஒரு வரியை மாற்றி அமைக்க வேண்டும் என்றால் ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒப்புதலை பெற…
-
முன்னுரை 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமல்படுத்தும் தொடக்கவிழா நிகழ்ச்சியாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டியது. தான் எதிர்த்த ஜிஎஸ்டி வரிவிதிப்பை தானே அமல்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்டியது பாஜக அரசு. பாஜகவின் இந்த முயற்சியை எதிர்ப்பவர்களை தேசவிரோதிகள் என்றுகூட அந்தக் கட்சியின் தலைவர்கள் பட்டம் சூட்டினார்கள். 1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவில் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. அன்று நாடாளுமன்றத்தின்…
-
I Hate You. இதை தாண்டி சொல்ல வேறு எதுவும் இருக்கிறதா என்ன? என்னை பார்க்காதே, என்னிடம் பேசாதே, என்னிடம் எதையும் எதிர்பார்க்காதே என்பதை தாண்டி வேறு எதுவும் இல்லை. உலகில் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளை விடவும் மிகவும் வலிமை நிறைந்த ஒரு சொற்றொடர். அதனாலேயே இதை நான் பயன்படுத்தியதே இல்லை. பல வருடங்களுக்கு முன்னர், ஓரிருவரை , அவர்கள் இறந்து போனால் கூட நன்றாக இருக்கும் என்று…
-
உயர் திரு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு எனதும் எனது மனைவியின் வாழ்க்கைக்கும் விடியலாக அமையும் என இருந்த இந்த ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு வைத்துதான் எடுப்போம் எனச் சொன்னதால் அதற்கு தயாரானோம். தற்போது அதற்கு PhD அவசியம் எனச் சொன்னதால் எனது மனைவிக்கு அந்த வாய்ப்பு இல்லை ஏற்கனவே நானும் எனது மனைவியும் பத்தாண்டுகள் காத்திருக்கிறோம். இதில் ஏதோ விடிந்தது போலிருந்த இந்த அறிவிப்பிலும் இருள் சூழ்ந்து விட்டது…
-
பெரியாரை ஆண்கள் விமர்சிப்பதை விட பெண்கள் விமர்சிப்பது மிக அவசிய தேவையாகவே எனக்கு தோன்றும். ஜாதி ஒழிப்பு, சமூக நீதி, பார்ப்பன எதிர்ப்பு என்பதை எல்லாம் தாண்டி பெரியாரின் பெண்ணியத்தை மீறிய ஒரு பெண்ணிய விடுதலை பேச்சை, இன்றளவிற்கும் கூட (இந்தியாவில்) வேறு யாரும் பேசி இருப்பதாக தெரியவில்லை. பேசுவதில்லையே தவிர, பல பெண்களும் பெரியாரின்பெண்ணிய கனவினை நிஜமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பெரியாரை படித்தவர்கள் இல்லை. பெரியாரை படித்த…








