அண்ணா பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும்போது 15 வயதைகூட தாண்டியிராத ராணியைக் கரம்பிடித்தார். கணவன், மாமியார் மனம் நோகாமல் அவர்களுக்காக, வாழும் குடும்பப் பெண்ணாகத்தான் ராணி அண்ணாதுரையும் வாழ்ந்தார். “அவரோட தொழிலிலோ அரசியலிலோ நான் தலையிடவே மாட்டேன். அவர் எதனாச்சும் உதவி கேட்டா செய்து தருவேன், அவ்வளவுதான்” என்று குழந்தை சிரிப்போடு நினைவு கூறுகிறார் ராணி. இந்தியா டுடேவிற்காக அவர் தன் நினைவலைகளை, கணவரோடு வாழ்ந்த காலத்தில் நடந்த…
-
-
தமிழின் காவலன், அண்ணா நீ, மேடைதோறும் புரட்சியாய் உன் சொற்கள் மக்கள் இதயம் கீற… உயிர்ப்பித்தாய் திராவிட இயக்கம் தனை… கல்வியின் சொல்லாடல், உன் வார்த்தைகள்… அறிவின் நெய்தல் உன் மொழிகள்… உன் பேச்சில் எண்ணங்கள் உயர்வாக விழித்தன தமிழரின் மனங்கள்… மதராஸ் பெயர் மறைந்து தமிழ்நாடு உதித்தது உன் தீர்க்கமான முடிவால்…. உன் இருமொழிக் கொள்கை தமிழரின் விளக்காக தமிழும் ஆங்கிலமும் அறிவின் சுடராக… இந்தியின்றி கல்வியில் உயர்ந்தது…
-
சீமா தனது கணவர் தேவிந்தர் மிஸ்ராவுடன் ‘மாப்ள.. ஃபோன மக கிட்ட கொடுங்க பேசனும்…’ ‘ஏன் மாமா அவ கடைக்குப் போயிருக்கா. அவள பிறகு ஃபோன் பண்ண சொல்றேன்…’ ‘என்னங்க.. என் மக மாசமா இருக்கிறா. இதோட பத்து தடவ.. ஒரு மாசமா.. நான் போன் பண்ணும் போதுலாம் அவ வீட்ல இல்ல.. இப்போ பேச முடியாதுனு சாக்கு போக்கு சொல்றீங்க. அன்னைக்கு பேரன் அம்மா ரொம்ப நாளா ஆஸ்பத்திரில…
-
”அம்பேத்கர் என்ன அம்பேத்கர் அவர் சோடாபுட்டி கண்ணாடி போட்டுருக்கார். கண்ணு தெரியாதவர்” என்றெல்லாம் வசைபாடும் டிக் டோக் காட்சி ஒன்றை பார்த்தேன். அதை பேசியவர் பா.ம.க சாதியை சேர்ந்த சகோதரர். அதைப் பார்த்து பெரிய கோபமோ எரிச்சலோ வரவில்லை. அவரைப் பார்க்கும் போது அன்றாடம் கூலிக்கு வேலை செய்யும் எளிய நிலையில் இருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது. அவருக்கு உண்மை எதுவும் தெரியாது. தெரிந்தால் அப்படி எல்லாம் பேச மாட்டார்.…
-
வாழ்க்கை சொல்லாத கதைகள் பேசும் ஒரு வானம் கனவுகள் கை கோர்க்கும் ஓர் அற்புத பயணம், உன் காலடியில் பயணம் தொடங்கும், கால்தடங்கல் மேல் காயங்கள் பேசும்… எதிர்வரும் சவால்கள் வெற்றிக்கான அழைப்புகள் இழந்திடாதே உன் மனதிடத்தை நின்று போராடு உயர்ந்து நில்… மேகங்கள் அழுதாலும் மழை வந்திடும் கண்ணீர் முத்துக்கள் தாண்டி வானவில் தோன்றிடும்… மழையில் நனைந்து புயலில் வீசப்பட்டாலும் தளராதே உன் நம்பிக்கை வேர்கள் ஆழமாய் நிலைத்திருக்கட்டும் …
-
https://www.uthayamugam.com/2024/01/1.html https://www.uthayamugam.com/2024/01/2.html உலகம் முழுவதும் காளைகள் பங்கேற்கும் விளையாட்டுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன. வன விலங்குகளாக திரிந்தவற்றை மனிதன் வீட்டு விலங்குகளாக பயன்படுத்தத் தொடங்கிய காலத்திலிருந்தே இதுபோன்ற விளையாட்டுகளும் தொடங்கியிருக்க வேண்டும். நாய்கள் கி.மு.13 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐரோப்பாவில் வீட்டு விலங்காகவும் வேட்டைக்காகவும் ஓட்டப்பந்தையங்களுக்காகவும் மீட்பு நடவடிக்கைகளுக்காகவும் சேவை செய்வதற்காகவும் சண்டையிடுவதற்காகவும் காவல்காற்பதற்காகவும் இறைச்சிக்காகவும் பயன்படுத்தப்பட்டன. வெள்ளாடு கி.மு. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு ஆசியாவில் வீட்டு…
-
2017 செப்டம்பர் மாதம் முதல்வர் ஜெயலலிதா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை குறித்த தகவல்கள் மர்மமாகவே இருந்தன. சுமார் 80 நாட்களுக்கு மேல் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தார். டிசம்பர் 5ம் தேதி அவர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் ஜல்லிக்கட்டு சம்பந்தமான போராட்டங்களை நடத்த முடியவில்லை. ஜெயலலிதாவின் உடல் அடக்கம் முடிந்த சில நாட்களில் ஜல்லிக்கட்டு தொடர்பான செய்திகள் மீண்டும் முக்கியத்துவம்…
-
நேற்று சத்தியம் முகநூல் பகுதியில் ஒரு காணொளி பார்த்தேன் அதில் சீமான் அவர்கள், மாடு மேய்ப்பது பற்றியும் மாட்டின் சிறப்புகளையும் குறித்து வழக்கம் போல், தம்பிகளா, அண்ணன் ஆட்சிக்கு வந்தால் மாடு மேய்ப்பதை அரசு தொழிலாக்குவேன், முதலமைச்சராக இருந்தாலும் நான் மாட்டு தொழுவத்தில் மாட்டு வால்ல உண்ணி எடுத்துட்டு இருப்பேன் என்னை பார்க்க வருபவர்களை அங்கே வரச் சொல்லுவேன் என்று கதையளந்து கொண்டிருந்தார். அதில் மேற்கோளாக, அய்யன் வள்ளுவரின்…
-
-
விஜயகாந்த் எப்படிப்பட்டவர் தெரியுமா என இப்போதும் உருட்டிக்கொண்டு இருக்கிறது சமூக ஊடகமும், காட்சி ஊடகமும். அதில் முக்கியமானது விஜயகாந்த் தினமும் சோறு போட்டார். யாருக்கு சோறு போட்டார்? என்கிற கேள்வியை இதுவரை யாரும் எழுப்பவில்லை. விஜயகாந்த்துக்கு முன்பே நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் என்கிற எம்.ஜி.ஆர் க்கும் இதே வரியை சொல்லி கொண்டாடினார்கள். தினமும் சோறு போட்டார். யாருக்கு போட்டார் எம்.ஜி.ஆர்? தன்னை பார்க்க தினமும் ராமாவரம் தோட்டத்திற்கு வந்த ரசிகர்களுக்கு…













