அலைகளின் அரசர்களே! ஆழியை ஆள்பவர்களே! விண்மீன்கள் வழிகாட்டும் இருளிலேயே வலைகளுடன் விரைந்தோடும் வீரர்களே! நீலக்கடலின் நேசர்களே – உங்கள் நாளுக்கு வணக்கம்! காற்றும் கடலும் கொந்தளித்தாலும் கண்ணீரும் உப்பும் கலந்த கரங்களால் நங்கூரம் பாய்ச்சி நம்பிக்கை விதைக்கும் நாட்டின் முதுகெலும்பு நீங்கள்! உங்கள் வலைகளில் சிக்குவது மீன்கள் மட்டுமல்ல உலகின் உணவுப் பாதுகாப்பும்தான்! உங்கள் கைகளில் இருப்பது துடுப்புகள் மட்டுமல்ல உயிர்களின் நலனும்தான்! புயலின் பேரொலியிலும் அஞ்சாது பரந்த…
கதை – கவிதை
-
-
அன்றொரு நாள் மாடி அறையில் தன்னந் தனியாக உட்கார்ந்து, நான் மௌனம் சாதித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது முன்பின் தெரியாத பெண் எனக்கு முன்னால் தோன்றி விம்மி விம்மி அழுதாள். நான் ஒன்றும் புரியாமல் விழித்தேன். அவள் அழுகையை நடுவே அடக்கிக் கொண்டு, “சிவபாதம் பிள்ளையின் புதல்வர் நீங்கள்தானே?” என்று கேட்டாள். “ஆமாம்.’’ “உங்கள் பெயர்?” “சஞ்சீவி.’’ “தயவு செய்து எனக்கொரு உதவி செய்ய வேணும்…” “என்ன உதவி?” “என்…
-
துயரம் சூழ்ந்த இந்நாளில், இந்தியா கண்ணீர் கடலில் மிதக்கிறது, தொழில் துறையின் அரசர், ரத்தன் டாட்டா மறைந்துவிட்டார். உலகம் வணங்கும் மகாதலைவன், தொலைநோக்குப் பார்வையின் ஞானி அமைதி கொண்டான் என்ற செய்தி உள்ளத்தை உலுக்கி உறைய வைக்கிறது. எஃகைப் போல் உறுதியான தொழில்நெறி, ஏழை எளியோர் நலனுக்காய் உயிர்த்துடிப்பாய் உழைத்த பெருந்தகை, டாட்டா என்ற பெயரை உலகமெங்கும் பரப்பியவர், இந்தியாவின் பெருமைமிகு முகமானவர். நாட்டின் முன்னேற்றத்திற்காய் நாள்தோறும் கனவு…
-
விடியலின் விதைகளை விதைத்து வீழ்ந்த சமூகத்தில் வீரம் ஊட்டி சுயமரியாதை எனும் சூரிய ஒளியைப் பரப்பி பாமரனின் இதயத்தில் புரட்சித் தடம் பதித்த தமிழகத்தின் விடிவெள்ளியின் பிறந்தநாள் இன்று! மூடநம்பிக்கை முள்வேலி சூழ்ந்த மண்ணிலே முரசறைந்தார் பகுத்தறிவின் முழக்கத்தை பெண்ணடிமை கண்டு எரிமலையாய்க் கொந்தளித்து கோடிக்கணக்கான மனங்களில் விடுதலைத் தீ மூட்டினார் சாதியெனும் சாக்கடையை வேரோடு சாய்த்தொழிக்க சமத்துவத்தின் சங்கொலியாய் ஒலித்தெழுந்தார் அடக்குமுறை அரக்கர்களை…
-
அன்பின் உருவமே, எம் ஆசிரியரே!அறியாமை இருளை அகற்றிய ஒளியே கல்வி என்னும் கனியைத் தந்துகனவுகளை விதைத்த கருணையின் உருவே! சிறகற்ற பறவைக்கு சிறகுகள் தந்தீர் சிந்தனையின் உயரத்தில் சிறகடிக்க வைத்தீர் தவறுகளை தண்டித்து திருத்தம் செய்தீர் தளராத உழைப்பால் எம்மை உருவாக்கினீர் தலைவணங்கி நிற்கிறோம் தாங்கள் முன்னே தலைநிமிர்ந்து நடக்கிறோம் தாங்கள் தந்த ஞானத்தாலே உம்அன்பின் ஆழத்தை அளக்கமுடியாது உம்தியாகத்தின் உயரத்தை எட்டமுடியாது …
-
கேரளத்தின் மரகத மலைகளில் மழையின் தாண்டவம் மண் சரிந்து உயிர் புதைந்து கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுக்குது வயநாட்டில்! மலையே! நீ ஏன் சரிந்தாய்? மண்ணே! நீ ஏன் நகர்ந்தாய்? காடே! நீ ஏன் அமைதியானாய்? கதறும் உயிர்களின் குரல்கள் காதில் விழவில்லையா? உங்கள் சீற்றத்தின் விளைவை உணர்ந்தீர்களா? இல்லை உணர்த்தினீர்களா? கனவுகள் கலைந்து, குடும்பங்கள் சிதைந்து ஏனிந்த கொடூரம்? கருணை கொஞ்சம் காட்டியிருக்கக் கூடாதா? இயற்கையின் சக்தியே! இரக்கம் வேண்டும்…
-
நெஞ்சின் ஆழத்தில் புதைந்த நினைவுகளின் நிழல்; சுழன்றடிக்கும் சூறாவளியாய் மனதினுள் வீசும் வலி. உன் பார்வை இதயத்தை எரிக்கிறது; வார்த்தைகளின் வெயிலில் உருகித்தான் போகிறேன் நான். மூச்சு சுடும் காதல் வலி கண்களின் வழியே கசியும்; சொல்ல முடியாத வரிகளாய் காதல் ரணங்கள். பிரிவு என்னும் வார்த்தையில் நின்று போன என் நிமிடங்கள்; என்னைச்சுற்றி உன் சுவாசப்பந்து, மூச்சுத் திணறுகிறேன். நிசப்த இரவுகளில் தீண்டலின்றி தொட்டு விடும் நினைவுகள்;…
-
அன்பின் வழி காட்டும் அழகிய நாள், உலகம் முழுதும் உறவாடும் பெருநாள் நாள், ஈகையின் இசை பாடும் இனிய நாள், அதுவே ஈகைத் திருநாள்… சிரிப்பின் மொழியில் செல்வங்கள் பரிமாற, இன்ப வெள்ளத்தில் இதயங்கள் நீந்தும். தன்னலம் கரைய தானம் சிறகு விரிக்க, மனிதம் மகிழ்ந்து கொண்டாட்டத்தில் நிறைந்திடும். கொடையின் சூரியன் உதயமாக, இல்லம் தோறும் இன்பம் பரவும். விண்ணில் விதைக்கும் நன்மை விருட்சமாக, கருணையின் கொடையில் நெஞ்சம் பேரின்பமாகும்.…
-
விடியலின் மெல்லிய முத்தம் போல், ஒலிவ மரத்தில் ஓர் இனம்புரியாத அமைதி வாரம்தோறும் வந்து சென்றாலும் இந்த வெள்ளி புனித நீரோடையின் ஆழ்கடலாகி அன்பின் காவியம் பாடுகிறது… அந்த கருமையான வானில் கருக்கலான சிலுவையில் அன்பின் சின்னம் தன் மக்களுக்காய் அவர்தம் பாவவிடுதலைக்காய் கொடும்துன்பத்தை விரும்பி ஏற்றது… அவரின் கைகளையும் கால்களையும் துளைத்தன நீண்ட இரும்பாணிகள்… உமிழ்நீரும் கேலிகளுக்கும் வசவுகளும் கசையடிகளும் அரங்கேற அவர் தலையில் ஏறியது முள் கிரீடம்… …
-
மொழிகளின் நாளில் ஆதி அந்தம் காணா எம் தாய் தமிழுக்கு சில வரிகள்… மொழிகள் மலர் தோட்டத்தில் மொழிகளின் மகரந்தமே… செம்மொழிகளின் கூட்டத்தில் மங்காத சூரியனே… இலக்கியங்களின் புகழில் உயர்ந்து நிற்கும் இமயமே… காலத்தின் கையெழுத்தில் கலையாத ஓவியமே… உள்ளங்களை உரமாக்கும் வாழ்வியல் நீரோடையே… வரலாற்றின் வள்ளலே சொற்களின் அரசியே… நாளும் இளமையாய் நடைபோடும் கன்னியே… உன் சொற்கள் காற்றில் மிதக்க உயிர் சுவைக்கும் அமிழ்தமாகுதே… தாய் தமிழே உன்…








