வடநாட்டு ஆதிக்க ஒழிப்புக்கான காரணங்களை நான் விளக்கி எழுதியதை, பண்புள்ள காங்கிரஸ் நண்பர்களுக்குப் படித்துக் காட்டியதாக எழுதியிருப்பது கண்டு, மகிழ்கிறேன். அவர்களிடம், நீ படித்துக் காட்டியபோது, நிச்சயமாக அவர்கள் பெருமூச்செறிந்திருப்பார்கள் – அவர்களால் இப்போதைக்கு வேறெதுவும் செய்யமுடியாது. இன்னமும் பண்டிதர் ஊட்டும் மயக்கம் வேலை செய்கிறது. அவர்களாலே அவ்வளவு சுலபத்தில், எளிதாக அந்த மயக்கத்திலிருந்து விடுபட முடியாது. மெள்ள மெள்ளத்தான் உண்மை அவர்கள் உள்ளத்திலே நுழையும். அதுவரையில் நமக்குத்தான் பொறுமை…
ஆதனூர் சோழன்
-
-
உரக்கப் பேசினால் உண்மை ஆகிவிடாது. பேசவிட்டு பேசுவதை உள்வாங்கி பேசுவோர் ஒரு ரகம். பிறரை பேசவிடாமலே பேசுவோர் ஒரு ரகம். எதிரிகளும் மதிக்கும் வகையில் தனது கருத்தைப் பேசுவோர் ஒரு ரகம். மதிக்கிறார்களே என்று அவர்கள் பேசுவதை எல்லாம் சகிக்க முடியாது என்போர் ஒரு ரகம். எந்த மேடையானாலும் அமைதியாகவும் ஆணித் தரமாக, சமரசம் இல்லாமல் தனது சித்தாந்த கருத்தை எடுத்து வைப்பவர் தோழர் அருள்மொழி அவர்கள். தொலைக்காட்சி விவாதங்களில்…
-
அலங்காநல்லூரில் முதல் விறகுக் கடையை எனது தாத்தாதான் தொடங்கினார். ஆம் முதல் எரிபொருள் சப்ளையர். தனியாருக்கு சொந்தமான மரங்களை வாங்கி வெட்டி அடிமரம், கிளைகள், சுள்ளிகள் என்று பிரித்து கட்டை வண்டிகளில் ஏற்றி அப்பா கொண்டு வருவார். அடிமரத்தை பலகைகளாகவும், கிளைகளை நிலை, ஜன்னல் கட்டைகளாகவும் அறுப்பார்கள். மரம் அறுக்க ஒரு ரம்ப கிடங்கு இருக்கும். கிடங்கிற்கு குறுக்கே ஒரு தென்னை மரத்தை போட்டிருப்பார்கள். பலகை அறுக்க வேண்டிய மரத்தை…
-
அண்ணா உருவாக்கிய கூட்டணி தந்திரம் ஆதனூர் சோழன் 1962 தேர்தலிலேயே காங்கிரஸை திமுக வீட்டுக்கு அனுப்பியிருக்கும். ஆனால் அண்ணாவின் கூட்டணி முயற்சி கைகூடாமல் போயிற்று. ராஜாஜியின் சுதந்திரா கட்சியுடனும், கம்யூனிஸ்ட் கட்சியுடனும் அண்ணா கூட்டணி குறித்து பேசினார். ஆனால், ராஜாஜியின் சுதந்திரா கட்சியை தங்களால் ஆதரிக்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறிவிட்டது. இதையடுத்து திமுக தனித்தே களத்தைச் சந்திக்க முடிவு செய்தது. சட்டமன்றத்திற்கு திமுக 142…
-
எழுதத் தெரியாவிட்டால் என்ன? தூய தமிழில் பேசத்தெரியாவிட்டால் என்ன? சிலருடைய நடவடிக்கைகளே இலக்கியத் தரம் மிக்கவையாக இருக்கும். அதிலும் அந்த நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டோரின் நலன் சார்ந்ததாக, ஒரு இனத்தின் பெருமையை மீட்டெடுப்பதாக, ஒரு நாகரிகத்தின் தொன்மையை பாதுகாப்பதாக, ஒரு மொழியின் சிறப்பை பறைசாற்றுவதாக அமைந்தால் அது எத்தனையோ இலக்கிய படைப்புக்கான கருக்களை வாரி வழங்கும். அந்த வகையில்தான் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் இலக்கியப் படைப்பு களுக்கு கருக்களை வாரிக்…
-
1.தூக்கம் நன்று வாழ்க்கைமுறை வேகமாக மாறி வருகிறது. உணவுப் பழக்க வழக்கங்களும் மாறிவிட்டது. இந்நிலையில், தூக்கமும் சவாலான விஷயமாக மாறிவிட் டது. புதிதாக குழந்தையைப் பிரசவிக்கும் பெண்களுக்கு தூக்கம் என்பது இயலாத காரியமாகி விட்டது. அதற்காக, தாய்மை அடைவதை தவிர்க்க முடியுமா? அல்லது, குழந்தை பிறந்த பின், சில மணி நேரங்களுக்கு ஒரு முறை பால் புகட்டுவதை தள்ளிப் போடமுடியுமா? பெண்கள், தினமும் இரவு நேரங்களில் குறைந்தது 7 மணி…
-
அன்றொரு நாள் மாடி அறையில் தன்னந் தனியாக உட்கார்ந்து, நான் மௌனம் சாதித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது முன்பின் தெரியாத பெண் எனக்கு முன்னால் தோன்றி விம்மி விம்மி அழுதாள். நான் ஒன்றும் புரியாமல் விழித்தேன். அவள் அழுகையை நடுவே அடக்கிக் கொண்டு, “சிவபாதம் பிள்ளையின் புதல்வர் நீங்கள்தானே?” என்று கேட்டாள். “ஆமாம்.’’ “உங்கள் பெயர்?” “சஞ்சீவி.’’ “தயவு செய்து எனக்கொரு உதவி செய்ய வேணும்…” “என்ன உதவி?” “என் அண்ணாவை…
-
பெண்ணை, ஆணுக்கு நிகர் என்பதே அநீதி! தோழர் கே.பாலபாரதியுடன் ஓர் நேர்காணல் மறைந்த கவிஞர் நந்தலாலா ஒருமுறை என்னிடம் பேசும்போது தோழர் பாலபாரதியைப் பற்றி ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார். ஒரு விசேஷ வீட்டுப் பந்தியில் தோழர் பாலபாரதிக்கு அருகில் அமர்ந்து நந்தலாலாவும் உணவருந்துகிறார். அசைவ உணவு பறிமாறுகிறார்கள். பாலபாரதி விரும்பிச் சாப்பிடுகிறார். நந்தலாலா அவரிடம் மெதுவாக பேசுகிறார்… “தோழர் குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு சில வகை உணவுகளை குறைச்சுக்கனும்Ó என்கிறார்.…
-
இந்த கரூர் கொடுமை பல அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளிக்கொண்டுவந்துகொண்டே இருக்கிறது. நாம் அரசியல், திரைப்படம், திரையிசைப் பற்றி கருத்துகளைப் பகிரும்போது போலி கிறிஸ்தவக் கூட்டம் ஒன்று அமைதியாகவே இருக்கும். எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும், ரசிக்கும், கருத்து வைத்திருக்கும், ஆனால் வாயைத் திறக்காது. ஏனென்றால், இவையெல்லாம் அந்தக் கூட்டத்தைப் பொறுத்தவரை “பாவம்“ “அசுத்தம்“ “அருவருப்பு” “கர்த்தருக்கு எதிரானவை”. அந்தக் கருத்தை நான் விமர்சிப்பதுமில்லை, அவர்களுக்கு விளக்கம் சொல்லி மாற்ற முயற்சிப்பதுமில்லை.…
-
(உதயமுகம் வார இதழை முழுமையாக வாசிக்க லிங்க்கைச் சொடுக்கவும்) கவிஞர் கருணானந்தம் இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் இல்லாத பெயர். ஈரோட்டில் தந்தை பெரியாரின் அறிவாயுத தயாரிப்பு பட்டறையில் உருவான மற்றொரு ஆயுதம். அண்ணா கண்டெடுத்த கொள்கை முத்துகளில் கலைஞரும் கருணானந்தமும் முக்கியமானவர்கள். கலைஞர் 1924ஆம் ஆண்டு பிறந்தவர். கருணானந்தம் 1925 அக்டோபர் மாதம் பிறந்தவர். ஆனால், கலைஞருக்கு முன்பே பெரியாரின் பட்டறையில் இணைந்தவர். அதற்கு காரணம் அண்ணா. இதெல்லாம் இருக்கட்டும்.…








