நான் எங்கு சென்றாலும் அருகிலிருக்கும் ஏதோ ஒரு பூங்காவிற்கு சென்று பார்ப்பதுண்டு. அங்கே நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்வோர் இருப்பார்கள். சில வயதானவர்கள் அரசியலை தீவிரமாக அலசிக் கொண்டிருப்பார்கள். மற்றொரு பக்கம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் பழைய பென்சன் திட்டம் அல்லது ஜேக்ட்டோ ஜியோ போராட்டம் குறித்து காரசாரமாக பேசிக் கொண்டிருப்பார்கள். அது எந்தக் கட்சி ஆட்சியாக இருந்தாலும் அதற்கு எதிராகத்தான் பேசிக் கொண்டிருப்பார்கள். இன்னொரு பக்கம்…
கட்டுரைகள்
-
-
மே 11, 1932 இந்தியாவில் ஹூணர்கள் துரத்தப்பட்டாலும் சில இடங்களில் இருக்கிறார்கள். பாலாதித்தியனுக்குப் பிறகு குப்த வம்சம் மங்கி மறைகிறது. வட இந்தியாவில் பல சிறு அரசுகள் தோன்றுகின்றன. புலிகேசி என்ற மன்னன் தெற்கே சாளுக்கியப் பேரரசை அமைக்கிறான். கான்பூருக்கு அருகில் கன்னோஜி என்ற பெரிய நகரம் இருந்தது. அது கிராமமாக இருந்து தலைநகராக மாறி, இப்போது மீண்டும் சிறிய கிராமம் போல இருக்கிறது. நாம் பேசுகின்ற நாளில் கன்னோஜி…
-
முதலமைச்சர் ஸ்டாலினிடம் விருது பெறும் முனைவர் ராமன் உலகம் முழுவதும் தமிழர்கள் வேலைக்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், பணிபுரியும் நாட்டில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்து, சாதனை புரிபவர்கள் மிகவும் சிலரே இருக்கிறார்கள். அப்படி பல துறைகளிலும் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் சாதனை புரிந்த தமிழர்களைக் கவுரவிக்க, தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் விழாநடத்தி விருது வழங்குகிறது. சைக்கிள் பயணத்தில் முனைவர் ராமன் 2023 ஆம் ஆண்டுக்கான அயலகத் தமிழர்…
-
பக்தியும் பயமும் இரண்டும் ஒன்றுதான்! பக்தி என்ற சொல்லை கண்டு பிடித்தவர்தான் மனிதர்களிலேயே மிகவும் போலியான மனிதர். உள்ளுக்குள் இருக்கும் பயத்தை வெறும் மினுங்கல் பூச்சு பூசி வெளிப்படுத்த கண்டு பிடிக்கப்பட்டது தான் இந்த பக்தி என்ற சொல். அன்பு என்பது உண்மையில் தானாகவே வரவேண்டியது அது ஒன்றும் தேவாரம் பாடி வரவழைக்க முடியாது. நெஞ்சு நிறைய பயம் உள்ளவரை நிரந்தர அடிமையாக்க உருவாக்கப்பட்ட சொல் இது. ஒரு வாகனத்தின்…
-
அஜ்மல்கான் (1863-1927) ஜாமியா கல்விநிறுவனத்தை நிறுவியதில் மிக முக்கிய காரணகர்த்தாவாக விளங்கியவர் அஜ்மல்கான். 1927ஆம் ஆண்டுவரை ஜாமியா கல்விநிறுவனத்தின் முதல் வேந்தராக பொறுப்பு வகித்தவர் அவர். 1863ல் டில்லியில் பிறந்தார். தொழில் ரீதியாக அவர் ஒரு சிறந்த மருத்துவர் ஆவார். ஹக்கீம் அஜ்மல்கான், 1906ம் ஆண்டில் திப்பி மாநாட்டினை நடத்தினார். அதே ஆண்டில் முஸ்லிம்லீக் கட்சியை உருவாக்குவதில் முக்கிய பணியாற்றினார். 1908ல் ஹாசியா-உல்-முல்க் எனும் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. ஒத்துழையாமை…
-
விடுதலைக்குப் பிறகு* 1950 ஆம் ஆண்டுவரை இருந்த மாநிலங்கள் பார்ட் A – மாநிலங்கள் : பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள்.. 9 மாநிலங்கள் அஸ்ஸாம் , பிஹார், மும்பை, கிழக்கு பஞ்சாப், மத்திய பிரதேஷ், மெட்ராஸ், ஒரிஸ்ஸா, உத்திர பிரதேஷ், மற்றும் மேற்கு வங்காளம் பார்ட் B – மன்னராட்சிக்கு உட்பட்டிருந்து இந்தியாவுடன் இணைக்கப்பட்ட மாநிலங்கள் : 9 மாநிலங்கள் ஐதராபாத், ஜம்மு-காஷ்மீர், மத்திய பாரத், மைசூர், பாட்டியாலா மற்றும் கிழக்கு…
-
சம்பவங்களுக்கான அழைப்பிதழ்களே எண்ணங்கள் உங்களை நோக்கி வரும் நிகழ்சிகள் அல்லது சம்பவங்கள் எல்லாமே உங்கள் அழைப்பிதழை பெற்ற பின்பே வருகின்றன. உங்களுக்கு கிடைக்கும் பொருட்கள் செல்வங்கள் இன்பங்கள் அல்லது துன்பங்கள் எல்லாமே உங்கள் அழைப்பிதழ் கிடைக்காமல் உங்களை நோக்கி வரமுடியாது. இது நிச்சயமான உண்மையாகும். ஒருவரின் காதலோ அல்லது கோபமோ மட்டும் அல்லாது விபத்தும் லாட்டரி அதிஷ்டமும் கூட உங்கள் அழைப்பிதழை பெற்று உங்கள் அனுமதியுடன்தான் உங்களை வந்தடைகின்றது. இதை…
-
அகல்யாபாய் (1725-1785) இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து தனது இறுதி மூச்சு உள்ளவரை உறுதியாக எதிர்த்துப் போராடிய முதல் அரசி அகல்யாபாய் ஆவார். மகாராஷ்டிராவில் உள்ள பத்ராடியில் 1725ல் பிறந்தார். அவரது தந்தை மங்கோஜி சிந்தியா ஒரு விவசாயி ஆவார். அகல்யாபாயின் தோற்றம் கவர்ச்சியானதாக இருக்காது. என்றபோதிலும் மகாராஜா மல்ஹாராவ் கோல்கர், அகல்யாபாயை தனது மருமகளாக்கிக் கொள்ள முடிவு செய்தார். அந்த சமயத்தில் முகலாயஆட்சி இந்தியாவில் மறையத் துவங்கியிருந்தது. அந்த…
-
இந்தியாவை தனது வீரத்தாலும் பீரங்கிப் படையாலும் பாபர் வென்றான். ஆப்கானிய சுல்தானை எளிதில் வென்று டில்லியை கைப்பற்றிய பாபர், சித்தூர் ராணா சங்கனின் ராஜபுத்திரர் படையை எளிதில் வெல்ல முடியவில்லை. ராணா சங்கன் ராஜபுத்திர வரலாற்றில் நீங்காப் புகழ்பெற்றவன். ஒருவழியாக ராஜபுத்திரர்களை பாபர் வென்றான், என்றாலும் அவன் மகன் ஹுமாயூனுக்கு கஷ்டமான எதிர்காலத்தை விட்டுச் சென்றான். ஹுமாயூன் படித்தவனாகவும், கலைப்பண்பு மிக்கவனாகவும் இருந்தான். ஆனால், தந்தையைப் போல போர்வீரன் அல்ல.…
-
ஆச்சாரியா வினோபா பாவே (செப்டம்பர் 17, 1895-நவம்பர் 17, 1982) இந்தியாவின் மகத்தான புதல்வர்களில் ஒருவரான வினோபா பாவே 1895ல் மஹாராஷ்டிராவில் உள்ள கோலாபா என்னுமிடத்தில் ஒரு சித்பவன பிராமண குடும்பத்தில் பிறந்தார். குழந்தைப் பருவத்திலிருந்தே அவர் விடுதலை தாகம் கொண்டவராக வளர்ந்தார். படிப்பில் சிறந்தவரான அவர் கணிதப்பாடத்தில் முதல் மாணவராக விளங்கினார். ஆனால் நாட்டிற்கு சேவைசெய்வதிலேயே அவரது நாட்டம் இருந்தது. அந்த எண்ணத்தில் உறுதியாக இருந்த அவர், தனது…





