கேரளத்தின் மரகத மலைகளில் மழையின் தாண்டவம் மண் சரிந்து உயிர் புதைந்து கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுக்குது வயநாட்டில்! மலையே! நீ ஏன் சரிந்தாய்? மண்ணே! நீ ஏன் நகர்ந்தாய்? காடே! நீ ஏன் அமைதியானாய்? கதறும் உயிர்களின் குரல்கள் காதில் விழவில்லையா? உங்கள் சீற்றத்தின் விளைவை உணர்ந்தீர்களா? இல்லை உணர்த்தினீர்களா? கனவுகள் கலைந்து, குடும்பங்கள் சிதைந்து ஏனிந்த கொடூரம்? கருணை கொஞ்சம் காட்டியிருக்கக் கூடாதா? இயற்கையின் சக்தியே! இரக்கம் வேண்டும்…
சகாய டர்சியூஸ் பீ
-
-
நெஞ்சின் ஆழத்தில் புதைந்த நினைவுகளின் நிழல்; சுழன்றடிக்கும் சூறாவளியாய் மனதினுள் வீசும் வலி. உன் பார்வை இதயத்தை எரிக்கிறது; வார்த்தைகளின் வெயிலில் உருகித்தான் போகிறேன் நான். மூச்சு சுடும் காதல் வலி கண்களின் வழியே கசியும்; சொல்ல முடியாத வரிகளாய் காதல் ரணங்கள். பிரிவு என்னும் வார்த்தையில் நின்று போன என் நிமிடங்கள்; என்னைச்சுற்றி உன் சுவாசப்பந்து, மூச்சுத் திணறுகிறேன். நிசப்த இரவுகளில் தீண்டலின்றி தொட்டு விடும் நினைவுகள்;…
-
விடியலின் மெல்லிய முத்தம் போல், ஒலிவ மரத்தில் ஓர் இனம்புரியாத அமைதி வாரம்தோறும் வந்து சென்றாலும் இந்த வெள்ளி புனித நீரோடையின் ஆழ்கடலாகி அன்பின் காவியம் பாடுகிறது… அந்த கருமையான வானில் கருக்கலான சிலுவையில் அன்பின் சின்னம் தன் மக்களுக்காய் அவர்தம் பாவவிடுதலைக்காய் கொடும்துன்பத்தை விரும்பி ஏற்றது… அவரின் கைகளையும் கால்களையும் துளைத்தன நீண்ட இரும்பாணிகள்… உமிழ்நீரும் கேலிகளுக்கும் வசவுகளும் கசையடிகளும் அரங்கேற அவர் தலையில் ஏறியது முள் கிரீடம்… …
-
மொழிகளின் நாளில் ஆதி அந்தம் காணா எம் தாய் தமிழுக்கு சில வரிகள்… மொழிகள் மலர் தோட்டத்தில் மொழிகளின் மகரந்தமே… செம்மொழிகளின் கூட்டத்தில் மங்காத சூரியனே… இலக்கியங்களின் புகழில் உயர்ந்து நிற்கும் இமயமே… காலத்தின் கையெழுத்தில் கலையாத ஓவியமே… உள்ளங்களை உரமாக்கும் வாழ்வியல் நீரோடையே… வரலாற்றின் வள்ளலே சொற்களின் அரசியே… நாளும் இளமையாய் நடைபோடும் கன்னியே… உன் சொற்கள் காற்றில் மிதக்க உயிர் சுவைக்கும் அமிழ்தமாகுதே… தாய் தமிழே உன்…
-
காலம் சிதைத்த கனவுகள் என, வரலாறு கனிந்து கூறிடும். விதியின் விளையாட்டில் வீழ்ந்தோர் என, வேதங்கள் மெல்லப் பாடிடும். ஆராய்ந்து பார்க்கையில், துரோகம், ஏமாற்றம் நிழலாய் ஆடிடும்! உழைப்பின் சுரண்டல்கள் கண்டு முறித்துவிடாதே உன் மனதை, உன் திறமை உன்னை வழிநடத்தும். ஏமாற்றத்தின் நிழல் கண்டு முடக்கிவிடாதே திறமையை, காலத்தின் கற்பிதம் மனதில் கொள்! தடைகள் சூழ நின்றாலும் கண்ணீரின் ஆழத்தை கடந்து செல், கனவுகள் மெய்ப்படும். துரோகத்தின் வலிகள் …
-
விழி அம்பு உன் விழி அம்பால் காயப்பட்ட என் இதயம் இன்று ஆய்வறையில் அணுக்கருவை விட..! அதீத சக்தி வேண்டுமாம் விஞ்ஞானிகளுக்கு!
-
கொள்ளைக்காரி என்னில் எப்போதும் உன் நினைவுகள்தான் இரவில்கூட நிம்மதியாய் உறக்கமில்லை… கனவில்கூட உனது தொல்லை என் இதயத்தைத் தான் கொள்ளையடித்தாய் விட்டு விட்டேன் ஆனால் இன்றோ..? என் உறக்கத்தையும் கொள்ளை கொண்டுவிட்டாயே!
-
தமிழின் காவலன், அண்ணா நீ, மேடைதோறும் புரட்சியாய் உன் சொற்கள் மக்கள் இதயம் கீற… உயிர்ப்பித்தாய் திராவிட இயக்கம் தனை… கல்வியின் சொல்லாடல், உன் வார்த்தைகள்… அறிவின் நெய்தல் உன் மொழிகள்… உன் பேச்சில் எண்ணங்கள் உயர்வாக விழித்தன தமிழரின் மனங்கள்… மதராஸ் பெயர் மறைந்து தமிழ்நாடு உதித்தது உன் தீர்க்கமான முடிவால்…. உன் இருமொழிக் கொள்கை தமிழரின் விளக்காக தமிழும் ஆங்கிலமும் அறிவின் சுடராக… இந்தியின்றி கல்வியில் உயர்ந்தது…
-
வாழ்க்கை சொல்லாத கதைகள் பேசும் ஒரு வானம் கனவுகள் கை கோர்க்கும் ஓர் அற்புத பயணம், உன் காலடியில் பயணம் தொடங்கும், கால்தடங்கல் மேல் காயங்கள் பேசும்… எதிர்வரும் சவால்கள் வெற்றிக்கான அழைப்புகள் இழந்திடாதே உன் மனதிடத்தை நின்று போராடு உயர்ந்து நில்… மேகங்கள் அழுதாலும் மழை வந்திடும் கண்ணீர் முத்துக்கள் தாண்டி வானவில் தோன்றிடும்… மழையில் நனைந்து புயலில் வீசப்பட்டாலும் தளராதே உன் நம்பிக்கை வேர்கள் ஆழமாய் நிலைத்திருக்கட்டும் …
-
நேற்று சத்தியம் முகநூல் பகுதியில் ஒரு காணொளி பார்த்தேன் அதில் சீமான் அவர்கள், மாடு மேய்ப்பது பற்றியும் மாட்டின் சிறப்புகளையும் குறித்து வழக்கம் போல், தம்பிகளா, அண்ணன் ஆட்சிக்கு வந்தால் மாடு மேய்ப்பதை அரசு தொழிலாக்குவேன், முதலமைச்சராக இருந்தாலும் நான் மாட்டு தொழுவத்தில் மாட்டு வால்ல உண்ணி எடுத்துட்டு இருப்பேன் என்னை பார்க்க வருபவர்களை அங்கே வரச் சொல்லுவேன் என்று கதையளந்து கொண்டிருந்தார். அதில் மேற்கோளாக, அய்யன் வள்ளுவரின்…








