‘வெல்லத்’ தமிழ்ப் பெண்கள்! ராஜா ராஜேந்திரன் முதலமைச்சர் ஸ்டாலின் சூட்டிங் எடுக்கிறார், சினிமாக்காரர்களைக் கொண்டு தன் புகழைப் பாடவைக்கிறார், அது செய்திச் சேனல்களில் ஓசி விளம்பரமாக ஒளிபரப்பப்படுகிறது என்றெல்லாம் ஒப்பாரி வைக்கும் சின்னக் கூட்டத்திற்கு ஒரு சொல்… எளிய மக்களுக்காகத் திட்டங்களைத் தீட்டி உழைக்கும் யாரும் அதை விளம்பரப் படுத்துவது தவறில்லை என்பதே என் கருத்து. மாறாக, வெறுமனே வாயில் வடை சுட்டுக்கொண்டு, எதுவுமே செய்யாமல் தம்பட்டம் அடிப்பதில் குறியாக…
-
-
கோடாரிக் காம்புகள்? உளவாளி குலத்தை அழிக்க வந்த கோடாரிக் காம்புகள் என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள்… உடனிருந்தே கொல்லும் வியாதி என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்… ஒரு வனத்தையே வெட்டி அழிக்கும் ஆற்றல் கொண்ட கோடாரியைப் பயன்படுத்த கைப்பிடி வேண்டும். அது அந்த வனத்தில் உள்ள மரத்தில் இருந்தே செதுக்கப்படும். நமது உடலுக்குள் எந்தப் பகுதியில் ஆற்றல் குறைவாக இருக்கிறதோ அதை அறிந்து அங்கே புகும் கிருமிதான் நம்மை மெல்ல மெல்ல அழித்துவிடும். வனத்தை…
-
>தீபமா, தீப்பந்தமா? ராஜா ராஜேந்திரன் சற்றே பிசகியிருந்தால், தீர்ப்பைக் கண்டு மிரண்டிருந்தால், தீபமேற்ற பணிந்திருந்தால் அது காட்டுத்தீயாய் பெருகி, எரிமலையாய்க் குமுறி, நாட்டையே பெருங்கொதிப்பில் ஆழ்த்தியிருக்கும் ! முதலமைச்சரின் திடமான உள்ளத்தால், மதுரை ஆட்சியரின் துணிவால், மதுரை நகரக் காவல்துறை ஆணையரின் நெஞ்சுறுதியால், இந்த அவலங்களேதும் நிகழாமல், தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகவே தன் பெயரைத் தக்கவைத்துக் கொண்டது. சார்ந்தோர்க்கு நம் நெகிழ்ச்சியான நன்றியும், மனம் திறந்த பாராட்டுகளும் உரித்தாகுக !…
-
>தடைகளை உடைத்த முதல் பெண் ஆதனூர் சோழன் 1870களின் கடைசி ஆண்டுகளாக இருக்கும். சந்திரம்மாள் என்ற ஒரு 11 வயதுச் சிறுமியை தேவதாசியாக அர்ப்பணிக்கும் விழா நடந்தது. அர்ப்பணிக்கும் விழா என்பது, கோவிலுக்கு ஆடுகளையும் மாடுகளை நேர்ந்து விடுவதைப் போல, பெண்களை நேர்ந்துவிடுவதுதான். அதாவது, அந்தப் பெண்கள் பொதுச் சொத்தாக கருதப்படுவார்கள். திணவெடுத்த ஆண்களுக்கு உணவாக வேண்டும். அந்த விழாவில் அன்றைய புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியின் முதல்வராக பணியாற்றிய எஸ்.நாராயணசாமி…
-
>திராவிட சிசு உதயநிதி ஆதனூர் சோழன் திராவிட சிசு என்று திருஞான சம்பந்தனை ஆதி சங்கரன் எதுக்காக கூப்பிட்டானோ நமக்கு தெரியாது. ஆதிசங்கரனும் யோக்கியனில்லை. திருஞானசம்பந்தனும் யோக்கியனில்லை. சம்பந்தனுக்கும் சங்கரனுக்கும் உள்ள ஒரே தொடர்பு என்ன என்று நமக்கு தெரியும். சங்கரன் ஆரியன். சம்பந்தன் சூத்திரன். ஆரியனின் ஆதிக்கம் நீடிக்க சமணர்களை கழுவேற்றிய சம்பந்தன் என்று சொல்லலாம். ஆரியன் எப்போதும் தனக்கு சாதகமான சூத்திரனைக் கொண்டே தனது ஆதிக்கத்தை தக்கவைக்கும்…
-
காவிரிப் பிரச்சனையின் நிஜ வரலாறு! ஆதனூர் சோழன் இரு நாடுகளுக்கு இடையில் ஓடும் நதி நீரை பகிர்ந்துகொள்வதில்கூட சிக்கல்கள் ஏற்பட்டதில்லை. ஆனால், இந்தியாவின் மாநிலங்களுக்கு இடையில் ஓடுகிற நதிகளின் நீரை பகிர்ந்து கொள்வதில் ஏற்படுகிற சிக்கல்களை தீர்க்கமுடியாமல் தவிக்கிற தவிப்பை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. ஆப்பிரிக்காவில் ஓடும் நைல் நதி, தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புரூண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரித்ரீயா, தெற்கு சூடான், சூடான், எகிப்து ஆகிய 11…
-
அலைகளின் அரசர்களே! ஆழியை ஆள்பவர்களே! விண்மீன்கள் வழிகாட்டும் இருளிலேயே வலைகளுடன் விரைந்தோடும் வீரர்களே! நீலக்கடலின் நேசர்களே – உங்கள் நாளுக்கு வணக்கம்! காற்றும் கடலும் கொந்தளித்தாலும் கண்ணீரும் உப்பும் கலந்த கரங்களால் நங்கூரம் பாய்ச்சி நம்பிக்கை விதைக்கும் நாட்டின் முதுகெலும்பு நீங்கள்! உங்கள் வலைகளில் சிக்குவது மீன்கள் மட்டுமல்ல உலகின் உணவுப் பாதுகாப்பும்தான்! உங்கள் கைகளில் இருப்பது துடுப்புகள் மட்டுமல்ல உயிர்களின் நலனும்தான்! புயலின் பேரொலியிலும் அஞ்சாது பரந்த…
-
1962ல் கலைஞருக்கு எதிராக நடந்த முதல் சதி! ஆதனூர் சோழன் திமுகவைத் தொடங்கிய அண்ணா தலைமையிலான ஐம்பெரும் தலைவர்கள் வரிசையில் இல்லாத கலைஞர் திமுகவை சதி செய்து கைப்பற்றி விட்டார் என்று ஒரு குரூப் தொடர்ந்து பொய்களை பரப்பி வருகிறது. ஆனால், நெடுஞ்செழியனைக் காட்டிலும் மற்ற யாரைக் காட்டிலும் அண்ணாவிடமும், கட்சி தொண்டர்களிடமும் நெருக்கமாக இருந்தவர் கலைஞர்தான் என்பதே உண்மை. அண்ணாவின் கட்டளைகளை தனது வியூகத்தால் மிகப்பெரிய அளவில் ரீச்…
-
வடநாட்டு ஆதிக்க ஒழிப்புக்கான காரணங்களை நான் விளக்கி எழுதியதை, பண்புள்ள காங்கிரஸ் நண்பர்களுக்குப் படித்துக் காட்டியதாக எழுதியிருப்பது கண்டு, மகிழ்கிறேன். அவர்களிடம், நீ படித்துக் காட்டியபோது, நிச்சயமாக அவர்கள் பெருமூச்செறிந்திருப்பார்கள் – அவர்களால் இப்போதைக்கு வேறெதுவும் செய்யமுடியாது. இன்னமும் பண்டிதர் ஊட்டும் மயக்கம் வேலை செய்கிறது. அவர்களாலே அவ்வளவு சுலபத்தில், எளிதாக அந்த மயக்கத்திலிருந்து விடுபட முடியாது. மெள்ள மெள்ளத்தான் உண்மை அவர்கள் உள்ளத்திலே நுழையும். அதுவரையில் நமக்குத்தான் பொறுமை…
-
உரக்கப் பேசினால் உண்மை ஆகிவிடாது. பேசவிட்டு பேசுவதை உள்வாங்கி பேசுவோர் ஒரு ரகம். பிறரை பேசவிடாமலே பேசுவோர் ஒரு ரகம். எதிரிகளும் மதிக்கும் வகையில் தனது கருத்தைப் பேசுவோர் ஒரு ரகம். மதிக்கிறார்களே என்று அவர்கள் பேசுவதை எல்லாம் சகிக்க முடியாது என்போர் ஒரு ரகம். எந்த மேடையானாலும் அமைதியாகவும் ஆணித் தரமாக, சமரசம் இல்லாமல் தனது சித்தாந்த கருத்தை எடுத்து வைப்பவர் தோழர் அருள்மொழி அவர்கள். தொலைக்காட்சி விவாதங்களில்…












