தேர்தல் முடிவுகளத் தீர்மானிப்பது எது? ஆட்சியில் நடந்த தவறுகளா? கூட்டணி பலமா? வலுவான கூட்டணியே பொதுவாக தேர்தலில் நடபெறும் தில்லுமுல்லுகளை தடுத்து வெற்றியைத் தீர்மானிக்கும் என்பது எனது முடிவு. நெருக்கடி நிலை 1975 1976 ஜூன் 25 முதல் 1977 மார்ச் 21 வரை இந்தியாவில் நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தினார். 1971 மக்களவைத் தேர்தலில் அவருடைய வெற்றி செல்லாது என்றும், 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட…
கட்டுரைகள்
-
-
முதலமைச்சர் ஆனபிறகு அண்ணாவுடன் காமராஜர் முன்னாள் காங்கிரஸ் தலைவர் என்கிற முறையில் பெரியார் பேச்சுக்கு மரியாதை தருவார், அவரது பேச்சைக்கேட்டு ராஜாஜி மூடிய 9400 பள்ளிகளில் 6000 பள்ளிகளை மீண்டும் திறந்தார் என்கிற ஒரே காரணத்திற்காகவே… எதிரணியாக இருந்தபோதும், குடியாத்தம் தொகுதியில் அவருக்கெதிராக வேட்பாளரை நிறுத்தாமல் வெற்றிபெற வைத்தார் அண்ணா. அதற்கு பதிலுபகாரமாக, 1962 தேர்தலில் காஞ்சிபுரத்தில் அண்ணாவுக்கெதிராக பெரும்தனவந்தரான பஸ் ஓனர் நடேச முதலியாரை நிறுத்தினார். நாட்டிலேயே அதுவரை…
-
மின்னொளியில் தகதகக்கும் தமிழ்நாடு நெருக்கடி நிலைக் காலத்தில், முதலமைச்சராக இருந்த கலைஞரிடம், காமராஜரைக் கைது செய்து சிறையிலடைக்கச் சொன்னது இன்றைய காங்கிரஸ்தான். அன்று காமராஜர் பக்கம் நிற்காமல், இன்றைய காங்கிரஸ் பக்கம் நின்றவர்கள் முதலைக் கண்ணீர் வடிப்பது காமெடி ! காமராஜர் தொடர் புகைப் பிரியர், அதுவும் அவர் பிடித்தது சுதேசி சிகரெட்டுகள் அல்ல. 555 என்ற ஃபாரின் சிகரெட்டுகள். அந்த காலத்திலேயே அதற்கு மாதச் செலவு பல்லாயிரம் இருக்கலாம்…
-
1965 இந்திய பாகிஸ்தான் போருக்கு காரணம் பாகிஸ்தான் மட்டுமே. இந்திய சீனப் போர் நடந்து முடிந்து சில ஆண்டுகளே ஆன நிலையில், இந்தியா பலவீனமாகத்தான் இருக்கும் என்றும், ஜம்மு காஷ்மீர் மக்கள் எப்போதும் கிளர்ச்சி செய்து இந்தியாவை விட்டு பாகிஸ்தானுடன் சேருவதற்குத் துடித்துக்கொண்டிருப்பதாகவும், இரண்டு தவறான புரிதல்களின் அடிப்படையில் ‘ஆபரேஷன் ஜிப்ரால்டர்’ என்ற பெயரில் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவி கிளர்ச்சியைத் தூண்ட முயன்றது பாகிஸ்தான். ஆனால், அவர்கள் நினைத்தபடி மக்கள்…
-
“முஸ்லிம்களுக்கு எதிராக மக்கள் திசைதிருப்பப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. அமைதியை மட்டுமே விரும்புகிறோம்!” என்ற ஹிமான்ஷி- பஹல்காம் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட லெப்டினன்ட் வினய் நர்வாலை திருமணம் செய்து ஆறே நாளில் பறிகொடுத்த மனைவி. ‘முஸ்லிம்களுக்கு ஆதரவு என்கிறாயா? உன் புருஷன் ராணுவ வீரன் என்றால் எங்களுக்கென்ன ? அவன் செத்தால் எங்களுக்கென்ன?’ அவர்மீது இந்தியா முழுவதும் சமூக ஊடகங்களில் அவதூறுகளைப் பொழிந்தார்கள் ஹிந்துத்துவ வெறியர்கள்! எப்படி? ‘அவள் ஜவஹர்லால் நேரு…
-
வயிற்றுப் பஞ்சமில்லாமல் நல்ல சோறு சாப்பிட வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள். எதிர்காலத் தேவைகளுக்குப் பணம் சேமிக்க வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள். கடினமாக உழைத்து சம்பாதித்த பெரும் பணத்தை அறியாமையால் வீணடிப்பது சரிதானா? CBSC பள்ளி அல்லது Matriculation பள்ளி போன்ற தனியார் பள்ளியில் இலட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறீர்களே அது எதற்கு? நல்ல வேலைக்குப் போகவா? ஆங்கிலம் சரளமாகப் பேசவா? குடும்பக் கௌரவத்தைக்…
-
இன்றோடு 22 நாட்கள் ஆகின்றன மீண்டும் நான் திருப்புட்குழி பள்ளிக்கு வந்து. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்று வீட்டிலும், பள்ளியிலும் அவ்வப்போது பயமுறுத்தப்படுவதால், கொஞ்சம் அடக்கி வாசிக்கின்றனர். எட்டாம் வகுப்பும், ஒன்பதாம் வகுப்பும் எனக்கு பயங்கர சேலன்ஜ் தருகின்றனர். ஒவ்வொரு நாளும் புதுமை என்பது என் வகுப்பறைச் செயல்பாட்டு திட்டம். ஒவ்வொரு நாளும் ஆசிரியர் உள்ளே நுழைந்ததிலிருந்து வெளியேறும் வரை என்ன மாதிரியான செயல்களைச் செய்வார்கள் என்று மாணவன் கணித்து…
-
உடன்பிறப்பே, இந்துமதக் கடவுள்களில் மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மாவுக்குக் கோயிலே எங்கும் கிடையாது. எங்கேயாவது ஒரு கோயில் இருக்குமேயானால் அது அதிசயம்தான். சிவனுக்கு நாடெங்கும் ஆலயங்கள் உண்டு. விஷ்ணுவுக்கும் எண்ணற்ற கோயில்கள் உண்டு. ஆனால் படைக்கும் தொழிலை மேற்கொண்ட பிர்மதேவனுக்கு ஒரு ஆலயம் கூட இல்லாதிருப்பது வியப்புக்குரிய ஒன்றல்லவா? நல்ல வேளை; சிருஷ்டிகர்த்தாவான பிரம்மாவுக்குக் கோயில் இருந்து ஒவ்வொரு ஊர்க் கோயிலிலும் பிரார்த்தனை நடத்துகிற பக்தர்களுக்குப் பிரதி உபகாரமாகப் பிள்ளைச் செல்வங்களை…
-
உடன் பிறப்பே, அழகின் சிரிப்பாய் முகமும் – அருவியின் கீதமாய்ப் பேச்சும் ‘அங்கமோ தங்கம்’ எனும் விதத்தில் நிறமும் கொண்ட பாவை ஒருத்தியைப் பாட்டெழுதும் புலவர்கள் ‘மாம்பழ மங்கை’ என வர்ணிக்கத் தவறமாட்டார்கள்! ‘எலுமிச்சம் பழம் போல் இருக்கிறாள்’ எனச் சிறப்பித்துக் கூறும்போது, அவள் நிறம் மட்டுமே நினைவில் வரும்! ‘செந்தாமரையைப் போன்றாள்’ எனக் கவிச்சரம் தொடுக்கும் போது, அவளுடைய எழில்மிகு மென்மையான வண்ண முகமே எதிர் நிற்கும்! ‘மயிலனையாள்’…
-
தகவல் தொடர்பு துறை இன்று அபரிதமாக வளர்ந்து விட்டது. ஒருவருக்கொருவர் தகவல்களை செய்திகளை, பரிமாறிக் கொள்ள இணையம், எஸ்.எம்.எஸ்., இ-மெயில் வாட்ஸ்அப் என்று எத்தனையோ விஷயங்கள் இன்று வளர்ந்து விட்டது. அரசர்கள் தூதுவர்கள் மூலம் தூது அனுப்பி செய்திகளை பரிமாறி கொண்டதாக வரலாறு நமக்குச் சொல்கிறது. புறாக்கள் மூலம் செய்தி அனுப்பப்பட்டதாகவும், சொல்லப்படுகிறது. கவித்துவ மிகையாக இலக்கியங்கள் மேகம் விடு தூது, அன்னம் விடு தூது என்று தூது பற்றி…






