இதயமே அணையாக சிறு சிறு துளியாய்எனில் சேர்ந்தஉன் நினைவுகள்இன்று..காட்டாற்று வெள்ளமாய்தடை போட…அணை வேண்டும்அன்பே…தருவாயா??உன் இதயத்தை..அணையாக…
கவிதை
-
-
மருந்தாக உன் இதயம் காணும் பொருட்களெல்லாம்உன் உருவம்…கண் மூடினாலும்உன் பிம்பம்..உன் நினைவுகள்நிழலாய் துரத்த…நிம்மதியை தொலைத்தேனடி…இதயத்தைத் தானடிஉன்னிடம் இழந்தேன்!!!ஏனோ!!!மரணத்தையே…தொட்டு விட்டதாய்வலி என்னில்…இதுகூட இனிமையடிமருந்தாக…உன் இதயம் தந்தால்!
-
வாகைப்பூ நான் எப்போதும் விழித்திருக்கிறேன். விழியுறங்கும் வேளையிலும்உணர்வுகள் விழித்திருக்ககனவுகளில் உலவுகிறேன். பகலைக் கடந்து இரவுக்குள்நான்நுழையும் சமயமெல்லாம்கொடிய அரக்க உள்ளங்கள்கொதிக்கின்ற உலையாகிஎன்னைக் கவ்வ எத்தனிக்கின்றன. எவரெஸ்டில் நிலவும்பனிக்காற்றின் தழுவலாகஎன்னைப் பிணைக்கும்அன்புப்பூ சொரிகின்ற ஆத்மாக்கள்துணையோடு நான்ஒவ்வொரு உலையையும் புறமொதுக்கிஇரவுக்குள் பிரவேசிக்கிறேன். விழியுறங்கும் வேளையிலும்உணர்வுகள் விழித்திருக்ககனவுகளில் உலவுகிறேன். நான் எப்போதும் விழித்திருப்பேன்.
-
அர்த்தம் சாவின் விளிம்பில் சதுரங்கக் காய்களாய்மானுடமியக்கும் மந்திரம் எது? ஒருவழிப் பாதையில் உலகைச் செலுத்திஉள்ளவர்சிந்தனை பலவழிசிதற பாழ்செய்தது எது? விசையும் திசையும் வகைப்படுத்திவீழ்ந்தெழுந்து வீரம்பேசிஇசையும் கலையும் எண்ணிவிளைத்துஇரசிக்கும் நெஞ்சில் சாந்தியடைத்தும்,வெண்புறாவின் சின்னந்தரித்துப் பின்அசைப்பதென்ன சமாதானக்கொடி? காலப்போக்கில்புளியமரங்களில்புடலங்காய்கள் தொங்கக்கூடும். வேறோர் அச்சில்பூமியை நகர்த்திபிரபஞ்சத்தின் புதுவிதி எழுதப்படும். அதற்குள்ளே ஏனிந்தநவீன ஆயுதங்கள்? பொறுமையும் முயற்சியும்புதுப்புதுக் கடவுளரைபடைத்துக்கொண்டே இருக்கட்டும்பொழுது புலர எழுந்துகாரியங்கள் மேற்செல்வோம்.
-
பெய்தது மழை துடிக்கும் உன் விழிமச்சங்கண்டுகார்மகள் இடியாய் ஒப்பாரியிட!நெஞ்சங்கலங்கிய முகில்களும்மின்னலாய் மிரட்டலிட!காரிருளும் சூழ்ந்தது வானுலகை…இனியும் தாமதித்தால் ஆபத்துபயந்த வருணனும்!பாய்ந்தோடி வந்தான் புவிமீதுசாரலாய் உனைக்காக்க..!
-
ஒவ்வொருநாளும்… முந்தைய இரவின் புறங்கண்டுமுகிழ்த்த சிவப்புப் புது உதயம் இன்று –உறங்கியவை யாவும் விழிப்புற்றனஇழந்தவை யாவும் பெற்றுக்கொண்டனஓய்ந்தவை யாவும் இயங்கத் தொடங்கின. முந்தைய இரவின் முச்சந்திகளில்முழங்கப்பட்ட முரண்பாடுகள்முழுவதுமாய் முகமழிந்தன. விரிந்து வியாபித்தவெளிச்சப் பெருங்கடலில்சௌந்தர்யங்கள் யாவும் சங்கமித்திருந்தன. சுற்றிலும் சூழ்ந்தகாற்றின் வயிற்றில்சுகந்தச்சுமை சூல்கொண்டிருந்தது. பிரச்‘சினை’க் கழுதைகளின்பிதுரார்ஜித முதுகுகளில்வாழ்க்கைப்பொதிகள் தடங்கலின்றிப் பயணித்தன. நிச்சயமற்ற முடக்கங்களைநிரந்தர அடக்கமாயெண்ணிநொண்டி நெஞ்சினர் நொடித்துப் புதைந்தனர். நிழல் ஒற்றர்கள்நேரமொரு கண்டமும் பூரண ஆயுளுமாய் நீண்டுசூரியனை எதிர்த்திசையில் எகிறித்தள்ளப் போராடினர்.…
-
மின்சாரமறுந்த இந்த இரவில்பக்கத்தில் பூத்திருக்கிறதொரு மெழுகுஉன் மீதான என் பிரியத்தைஅதனிடம் பேசப் பேசஅதன் சுடர்க்கை திக்கித் திக்கிவரைகிறதொரு சித்திரம்வளையவரும் கொசுக்களோஅவ்வளவு காதலா… அவ்வளவு காதலா…என நம்பமுடியாமல்என் காதோரம் ரீங்கரிக்கின்றனநெடுநேரம் கதைகேட்டு சலித்த வண்டொன்றுஇத்தனை காதலிருந்தால்நேரில் சென்று அவளின்இதயப் பள்ளத்தாக்கில் குதிக்கவேண்டும்இல்லையேல் இப்படிநெருப்புத் தழலில் பொசுங்கவேண்டும்என்றபடி சுடருக்குள் பாய்கிறது பெருமழை பொழிந்துதிணறடித்துக்கொண்டிருக்கிறது உன்னழகுஆயுள் காணாத அழகு வெள்ளம்அடித்துப்போகிறது என்னிதயம்உன் அழகின் ஆக்ரமிப்பில்நிலைகுலைந்தவர்களும்நினைவுறைந்தவர்களும்மொழிதிகைத்தவர்களும்நிவாரணம் கேட்டு வரிசையில் நின்றபோதுதான்சேதத்தின் விஸ்தீரணம்சற்றேனும் பிடிபட்டது எனக்குஎல்லோரையும்போல்உதடுபிரியாத புன்னகையையோபிரியமான…
-
5 இரவெல்லாம் ஊர்சுற்றிவிட்டு வீடு திரும்பியிருக்கிறது பூனை இந்த நிலவுமட்டும் வாய்பேசுமென்றால் எங்கே போனாய் என்ற கேள்விக்கு பூனை சொன்ன மியாவை மொழிபெயர்த்துவிடலாம்! 6 தன் வீட்டு வாசலோரத்தை இந்த கூறுகெட்ட பூனை பொதுக் கழிப்பிடமாக பயன்படுத்துவதாக அலுத்துக்கொள்கிறார் அவர் ஒருமுறையாவது அந்தப் பூனைக்கு பாடம் கற்றுத்தந்துவிடவேண்டுமென்று அவர் கையில் வைத்திருக்கும் பிரம்பைப் பார்த்த தினம் சிறுநீர்கூட வரவில்லை எனக்கு இரண்டொரு முறை அவர் கற்றுத் தரமுயன்ற பாடத்திலிருந்து லாவகமாக…
-
இளைப்பாற வந்திருக்கிறது ஒரு பறவை பெயர் என்ன, எங்கிருந்து வருகிறாய் எதுவும் கேட்காமலே விசிறவிடத் தொடங்குகிறது மரம் கடந்துவந்த தொலைவை பறவையின் முகத்தில் பார்த்து தன் கிளைகளில் கனிந்திருக்கும் பழங்களைப் பரிமாறுகிறது பதிலுக்கு தன் ப்ரியத்தைக் காட்ட வழியேதுமறியாத பறவை தன் இறகிலொரு தூவியை விட்டுச்செல்கிறது கிளையிலிருந்து நழுவி தரைசேரும் அந்த தூவியைத்தான் நீங்கள் காதுகுடைந்து கறைப்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள்! 2 நீங்கள் புல்லாங்குழலை மட்டும்தான் பார்க்கிறீர்கள் நானோ அதற்குள் உறைபிரிக்கப்படாத பலநூறு…
-
13 உங்கள் சாக்லெட்டை பொதிந்திருப்பது ஒரு பாலிதீன் உறை கைவிடுங்கள் இப்பழக்கத்தை என குழந்தைகளின் பின்னே மன்றாடியபடி சென்றுகொண்டிருக்கிறார் ஒரு மீட்பர் குழந்தைகளோ சாக்லெட்டுக்குப் பதில் பாலிதீன் உறைகளைக் கைவிட்டபடியே நடந்துகொண்டிருக்கிறார்கள் 14 உங்கள் கன்டெய்னர் டப்பாக்களின் மூடியைத் தாண்டி உள்ளே புக எறும்புகளுக்கு வழி தெரியவில்லை வழியில் பூச்சிக்கொல்லி மருந்தால் நீங்களிட்ட லட்சுமண ரேகை சில நூறு எறும்புகளின் உயிரை சாப்பிட்டுவிட்டன உங்களின் கான்கிரீட் சுவர்களைத் துளைத்துப் பொந்திடுவதோ…





