மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை திமுகவின் கோட்டை ஆக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் ஆர்.கோவிந்தராஜ்… தமிழ்நாட்டில் எல்லா இடைத்தேர்தல்களிலும் அமைச்சர் மூர்த்தி சொல்லும் தொகுதிகளில் இவரும் இவருடைய மனைவி ரேணுகா ஈஸ்வரியும் சிறப்பாக தேர்தல் பணியில் ஈடுபடுவது வழக்கம்… தேர்தல் பணிகளில் இவர்களுடைய ஈடுபாடு குறிப்பிடத்தகுந்தது. கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து திமுகவுக்கு வந்தவர்… அலங்காநல்லூர் அரசியலில் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட செல்வாக்கை பெற்றிருந்தார்…அந்தச் செல்வாக்கை திமுகவின் வளர்ச்சிக்கு பயன்படுத்தினார்…இவருடன் இவருடைய மனைவியின் பங்கும்…
-
-
“ திருப்பதி லட்டுவில் ஹெரிட்டேஜ் நெய் பயன்படுத்த, சந்திரபாபுவின் வியாபார தந்திரம் இது! ஹெரிட்டேஜ் நிறுவனத்தின் உரிமையாளராக, அவரின் மனைவி மருமகள், பேரன் உள்ளனர்” என்கிறார் Prathaban Jayaraman . பெங்களூரில் நடை பயிற்சியின் போது ஒரு நண்பர் சொன்னார், “கர்நாடகாவில் அமுல் பால், தயிர் ,நெய் இவற்றைத் திணித்து நந்தினியை அளிக்க அமித் ஷா முயற்சித்தார். கர்நாடக விவசாயிகள் ஒன்றாய்க் குரல் கொடுத்து தோற்கடித்தார்கள். இப்போது திருப்பதி…
-
விடியலின் விதைகளை விதைத்து வீழ்ந்த சமூகத்தில் வீரம் ஊட்டி சுயமரியாதை எனும் சூரிய ஒளியைப் பரப்பி பாமரனின் இதயத்தில் புரட்சித் தடம் பதித்த தமிழகத்தின் விடிவெள்ளியின் பிறந்தநாள் இன்று! மூடநம்பிக்கை முள்வேலி சூழ்ந்த மண்ணிலே முரசறைந்தார் பகுத்தறிவின் முழக்கத்தை பெண்ணடிமை கண்டு எரிமலையாய்க் கொந்தளித்து கோடிக்கணக்கான மனங்களில் விடுதலைத் தீ மூட்டினார் சாதியெனும் சாக்கடையை வேரோடு சாய்த்தொழிக்க சமத்துவத்தின் சங்கொலியாய் ஒலித்தெழுந்தார் அடக்குமுறை அரக்கர்களை…
-
எதிர்க்கட்சியாக திமுக தொடர்ச்சியாக இருந்த நேரம் அது. முத்தமிழறிஞர் கலைஞர் இயக்கத்தைக் கட்டுக்போப்பாக வைத்திருந்தார். ஆளுங்கட்சியை இயக்கக் கூடிய கட்சியாக திமுக வலிமையுடன் இருந்தது. அதற்கு காரணம் அதன் உறுதிமிக்கத் தொண்டர்கள். அரசினர் தோட்டத்தில் செயல்பட்டு வந்த திமுக அலுவலகம் ஆட்சியாளர்களால் ஒரே நாளில் அப்புறப்படுத்தப்பட்டது. பொருட்கள் வெளியே வீசப்பட்டன. திமுகவுக்கு என தனியாக ஒரு கட்டடம் கட்டியே தீருவது என உறுதி எடுத்தார் கலைஞர். தன் தொண்டர்களைத் தான்…
-
அன்னப்பூர்னா முதலாளி சீனிவாசன் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியாகி இருக்கிறது! கோவை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உடன் இருக்கிறார்! இங்கு சீனிவாசன் அவர்கள் எதற்காக மன்னிப்பு கேட்டார் என்று ஆராய்ந்தால் 1. அரசின் கொள்கையை எதிர்த்தாரா? இல்லை 2. அரசின் வரிவசூலை குறைக்க சொன்னாரா? இல்லை 3. தன்னுடைய தொழிலுக்கு சலுகை கேட்டாரா? இல்லை 4. அரசை நடத்தும் பாஜகவை விமர்சித்தாரா? இல்லை…
-
உள்ளதை உள்ளபடி ஆவணப்படுத்துவதும் புரிந்ததையும் புரியாதவற்றையும் அறிவு நேர்மையுடன் சோர்வின்றி விளக்கிச் சொல்வதும்தான் அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லும் அறிவுச் சொத்து. அந்த வகையில் ‘பெரியய்யா’ என்று பயிற்சி மாணாக்கர் அனைவராலும் அழைக்கப்பட்ட குமரேச ஸ்தபதியாரின் மாணவர் ஜெயராமனின் குறிப்பேடுகளை ஆதாரமாகக் கொண்டு கணேஷ் ஸ்தபதி, வை.பாலசுப்ரமணியன் ஸ்தபதி ஆகிய இருவரும் இந்த நூலை உருவாக்கி உள்ளனர். இவர்களது முயற்சிக்கு இரண்டு பெரிய சிற்பிகளான பாஸ்கரன், இராசேந்திரன் ஆகியோர்…
-
அன்பின் உருவமே, எம் ஆசிரியரே!அறியாமை இருளை அகற்றிய ஒளியே கல்வி என்னும் கனியைத் தந்துகனவுகளை விதைத்த கருணையின் உருவே! சிறகற்ற பறவைக்கு சிறகுகள் தந்தீர் சிந்தனையின் உயரத்தில் சிறகடிக்க வைத்தீர் தவறுகளை தண்டித்து திருத்தம் செய்தீர் தளராத உழைப்பால் எம்மை உருவாக்கினீர் தலைவணங்கி நிற்கிறோம் தாங்கள் முன்னே தலைநிமிர்ந்து நடக்கிறோம் தாங்கள் தந்த ஞானத்தாலே உம்அன்பின் ஆழத்தை அளக்கமுடியாது உம்தியாகத்தின் உயரத்தை எட்டமுடியாது …
-
குறியீடு கண்டுபிடிக்கும் இன்னுமொரு குறிசாலன் என்று என்னைத் தவறாகக் கேவலமாக நினைக்க மாட்டீர்கள் என்றால் ஒன்று சொல்வேன். வாழை படத்தில் அந்த சிறுவனை மற்ற கதாபாத்திரங்கள் சிவனைஞ்சான் என்று அழைத்தாலும், விமரசனங்களிலும் வீடியோக்களிலும் (நெல்லை வட்டாரத்தைச் சேராத) பலரும் அந்த பெயரைச் சிவனைந்தான், சிவநந்தன் என்று பல வடிவங்களில் குறிப்பிட்டாலும் உண்மையில் அந்த பெயர் சிவனிணைந்தான் என்பதே. சிவனிணைந்த அல்லது சிவனணைந்த பெருமாள், நெல்லை வட்டார சுடலை மாடன், சாஸ்தா,…
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தலைவர் பி.ராமமூர்த்தி எழுதிய ஆரிய மாயை திராவிட மாயை என்ற நூலின் பிடிஎஃப் பிரதி கிடைத்தது. இந்த நூல் தற்போது விற்பனையில் இல்லை. ஆனால், இது வெளியான சமயத்தில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது… அந்த நூலை வாசிக்க நூலின் லிங்க்கை கொடுத்திருக்கிறோம்… https://drive.google.com/file/d/1BM1RbJNKvTcJZMqug-oaboPKrDDNiCTl/view?usp=drive_link
-
மாரி செல்வராஜின் வாழை படம் வெளியாகி பலரும் பொய்யாக புகழ்ந்து வருகின்றனர். நானும் வாழை படத்தை பார்த்தேன்… உன்மை சம்பவத்தின் கதை என்றாலும் வரலாற்றை மறைத்து வியாபார நோக்கமும் ஜாதிய வாதமே மேலோங்கி நிற்கிறது. சம்பவம் நடைபெறும் போது நானும் எனது ஊர் சார்ந்த இஸ்லாமியர்கள் அனைவரும் சம்பவ இடத்தில் போயி விடிய விடிய உயிரை கொடுத்து மிஞ்சி இருக்கும் ஏழு எட்டு உயிரை காப்பாற்றி மருத்துவமனை க்கு அனுப்பி…














