கொல்லப்பட்ட கௌரி லங்கேஷுடன் நண்பர் பிரகாஷ் ராஜ்… இவருடைய கொலையைத் தொடர்ந்தே, மோடி அரசை கடுமையாக எதிர்த்து வருகிறார் பிரகாஷ் ராஜ். என்ன செய்யக் காத்திருக்கிறது காவித் தீவிரவாதம்?எதிர்க்கருத்துக்கு பதில் துப்பாக்கிக் குண்டுகளா? செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி. பெங்களூருவில் உள்ள தனது வீட்டின் முன் சுடப்பட்டு இறந்து கிடந்தார் கௌரி லங்கேஷ். ஹெல்மட் அணிந்த இருவர் மோட்டார் சைக்கிளில் அவர் வீட்டு முன் நிற்பதையும், பின்சீட்டில் அமர்ந்திருந்தவர் கௌரி…
ஆதனூர் சோழன்
-
-
ஐன்ஸ்டீன் கோட்பாடு தவறாகிறதா? நமது பிரபஞ்சத்தின் ரகசியத்தை அம்பலப்படுத்திய பேரண்ட வெடிப்புக் கோட்பாடு இப்போது கேள்விகுறியாகி இருக்கிறது. 1905 ஆம் ஆண்டு மக்கள் விஞ்ஞானி என்று அழைக்கப்படும் ஐன்ஸ்டீன் இந்தக் கோட்பாட்டை முன்வைத்தார். E=mc2 என்ற அவருடைய கோட்பாடு நமது பிரபஞ்சம் உருவான விதத்தை மிக எளிமையாக விளக்கியது. நமது பிரபஞ்சத்தில் ஒளியைக் காட்டிலும் வேகமாக பயணிக்கக் கூடிய வேறு எதுவும் இல்லை என்று அவர்தான் சொன்னார். உலகம் இதுவரை…
-
இந்திரா குடும்பத்தினருக்கு துணிச்சல் புதிதல்ல. இந்திராவையே ஜவஹர்லால் நேரு துணிச்சலாகத்தான் வளர்த்தார். தாயில்லாத இந்திராவை விட்டுவிட்டு நேரு சிறையில் வாடியிருக்கிறார். இந்திராவும்கூட சிறுவயதிலேயே தன் வயது பிள்ளைகளை சேர்த்துக்கொண்டு விடுதலைப்போராட்டத்தில் பிரச்சாரம் செய்திருக்கிறார். வானர சேனை என்ற பெயரில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கு உதவி செய்திருக்கிறார். தந்தையின் செயலாளராக உலகைச் சுற்றி வந்திருக்கிறார். அமைச்சராகவும், பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்படும் அளவுக்கு மூத்த தலைவர்களுக்கு பிடித்தமாதிரி நடந்திருக்கிறார். பிரதமரான சமயத்தில் மூத்த தலைவர்களின்…
-
திமுக தலைவர்கள் சாதி வேறுபாடுகளை எதிர்த்து பகிரங்கமாக பேசினார்கள்… இப்போதும் பேசுகிறார்கள்… கல்வியும் வேலையுமே சாதி ஒழிப்பின் அடிப்படை என்ற தந்தை பெரியாரின் கோட்பாடை திமுக தலைவர்கள் இன்றும் வலியுறுத்துகிறார்கள்… அதற்கான சட்டபூர்வ, நிர்வாக ரீதியான நடவடிக்கைகளில் தொடர்ந்து செயல்படுகிறார்கள்… படிப்பு மட்டுமே யாராலும் பறிக்க முடியாத சொத்து என்பதை மேடைதோறும் திமுக தலைவர்கள் வலியுறுத்துகிறார்கள்… இவற்றை தங்கள் மேடைகளில் வலியுறுத்தும் தலைவர்கள் யார் என்று பகுத்தறிந்தால் இளைஞர்களுக்கு…
-
கார்ப்பரேட்டுகளின் பினாமி அரசு! இப்பொழுது அமலுக்கு வந்துள்ள ஜிஎஸ்டியில் ஒரே வரிவிகிதம் என்பது இல்லை. பல்வேறு வரி விகிதங்கள் உள்ளன. அதாவது, 0சதவீதம், 5சதவீதம், 12சதவீதம், 18சதவீதம், 28சதவீதம் என்று வரிவிகிதங்கள் இருக்கின்றன. மிக முக்கிய அம்சம் என்னவென்றால் மாநிலங்களின் உரிமைகள் அப்பட்டமாக பறிக்கப்படுகின்றன. இன்றைய சூழலில் சில வரிவிகிதங்களை ஜிஎஸ்டி கவுன்சில் நிர்ணயித்துள்ளது. மாநிலங்கள் ஒரு வரியை மாற்றி அமைக்க வேண்டும் என்றால் ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒப்புதலை பெற…
-
முன்னுரை 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமல்படுத்தும் தொடக்கவிழா நிகழ்ச்சியாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டியது. தான் எதிர்த்த ஜிஎஸ்டி வரிவிதிப்பை தானே அமல்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்டியது பாஜக அரசு. பாஜகவின் இந்த முயற்சியை எதிர்ப்பவர்களை தேசவிரோதிகள் என்றுகூட அந்தக் கட்சியின் தலைவர்கள் பட்டம் சூட்டினார்கள். 1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவில் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. அன்று நாடாளுமன்றத்தின்…
-
விரட்டப்பட வேண்டியவர்களை விரட்டுவதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது… தேர்தல் 7 கட்டங்களாக நடப்பதும் முதல்கட்டத் தேர்தல் முடிந்து தேர்தல் முடிவு அறிவிக்க 45 நாட்கள் காத்திருக்க வேண்டியதும் சர்ச்சையாகி இருக்கிறது… இந்தியா குடியரசாகி முதன்முதல் நடைபெற்ற பொதுத்தேர்தல் 1951 முதல் 1952 வரை 5 மாதங்கள் நடைபெற்றது… அதுதான் மிக அதிகமான நாட்கள் நடைபெற்ற தேர்தல்… அதற்கு அடுத்தபடியாக 2014 மக்களவை தேர்தல்தான் ஏப்ரல் 7 முதல் மே 12…
-
மே 11, 1932 இந்தியாவில் ஹூணர்கள் துரத்தப்பட்டாலும் சில இடங்களில் இருக்கிறார்கள். பாலாதித்தியனுக்குப் பிறகு குப்த வம்சம் மங்கி மறைகிறது. வட இந்தியாவில் பல சிறு அரசுகள் தோன்றுகின்றன. புலிகேசி என்ற மன்னன் தெற்கே சாளுக்கியப் பேரரசை அமைக்கிறான். கான்பூருக்கு அருகில் கன்னோஜி என்ற பெரிய நகரம் இருந்தது. அது கிராமமாக இருந்து தலைநகராக மாறி, இப்போது மீண்டும் சிறிய கிராமம் போல இருக்கிறது. நாம் பேசுகின்ற நாளில் கன்னோஜி…
-
அஜ்மல்கான் (1863-1927) ஜாமியா கல்விநிறுவனத்தை நிறுவியதில் மிக முக்கிய காரணகர்த்தாவாக விளங்கியவர் அஜ்மல்கான். 1927ஆம் ஆண்டுவரை ஜாமியா கல்விநிறுவனத்தின் முதல் வேந்தராக பொறுப்பு வகித்தவர் அவர். 1863ல் டில்லியில் பிறந்தார். தொழில் ரீதியாக அவர் ஒரு சிறந்த மருத்துவர் ஆவார். ஹக்கீம் அஜ்மல்கான், 1906ம் ஆண்டில் திப்பி மாநாட்டினை நடத்தினார். அதே ஆண்டில் முஸ்லிம்லீக் கட்சியை உருவாக்குவதில் முக்கிய பணியாற்றினார். 1908ல் ஹாசியா-உல்-முல்க் எனும் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. ஒத்துழையாமை…
-
ஆம், 1981ல் குமுதத்தில் அவர் எழுதிய சுயவாழ்க்கைத் தொடரில் சோபன் பாபுவுடன் கணவன் மனைவியாக வாழ்ந்ததை குறிப்பிட்டு எழுதினார். எம்ஜிஆருக்கும் தனக்குமான உறவு குறித்து அடுத்த வாரத்தில் இருந்து சொல்வேன் என்று முடித்தார். ஆனால், அடுத்தவாரம் அநத் தொடர் நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, 1982ல் ஜெயலலிதா அதிமுகவில் இணைக்கப்பட்டார். அந்த ஆண்டு நடந்த அதிமுக மாநாட்டில் பெண்ணின் பெருமை என்ற தலைப்பில் ஜெயலலிதா பேசினார். அதைத் தொடர்ந்து அதிமுகவின் கொள்கை பரப்புச்…








