ஒரு பெண் தனது தாயை பற்றி எழுதியது… “ப்ளீஸ்” என்று ஒத்த வார்த்தை சொன்னாலே உருகி கரைந்து விடுவார் என் அப்பா.. ஆனால் அம்மா அப்படி இல்லை.. இரும்பு மனுஷி.. ஒரு காரியத்தை அவரிடம் சாதித்து கொள்வது லேசுபட்ட விஷயம் இல்லை.. மண்டியிட வேண்டும், கெஞ்ச வேண்டும், மிஞ்ச வேண்டும், அப்பா வரும்வரை தூங்காமல் காத்திருந்து புகார் சொல்ல வேண்டும்.. எதுக்குமே மசிய மாட்டார்!! கோபம் தலைக்கேறி அழுது…
-
-
திருநெல்வேலியில் வெளியூர்க்காரர்களுக்கு அவ்வளவாகத் தெரியாத, ஐம்பது ஆண்டுகளுக்கு முன் காலத்தால் உறைந்து போனது போல் காட்சியளிக்கும், ஒரு பழைய கடைத்தெரு ஒன்றிருக்கிறது. வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பி, மாவீரன் ஊமைத்துரை முதல், சமீபத்தில் மறைந்த அறிஞர் தொ.ப வரை பலப்பல மனிதர்களை, வரலாறுகளைக் கண்டதை, கடந்ததைக், காட்டிக் கொள்ளாத பகுதி அது. பாளையங்கோட்டை தெற்கு பஜார் என்பது அதன் பெயர். அதன் கிழக்கு முனையில், குளோரிந்தா ஆலயம் என்ற ஒரு…
-
மேற்கு வங்கத்தில் தோழர் ஜோதிபாசு தலைமையிலான அரசு நிலமற்ற ஏழைகளுக்கு நிலத்தை பிரித்துக் கொடுத்தது……… நில உடமையாளர்கள், அதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார்கள்………….. அந்த ஒரு சாதனையைக் காட்டியே, அதிலும் நில உடமையாளர்கள் தங்கள் நிலத்தை பறித்துக் கொள்வார்கள் என்று சொல்லியே இடதுமுன்னணி தொடர்ந்து ஐந்து முறை வென்றது……….. ஐந்தாவது முறையாக வென்ற சமயத்தில்தான் ஜோதிபாசு பிரதமராக காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது………… மாநிலத்தில் 20 ஆண்டுகள் கூட்டணி அரசாங்கத்தை நிர்வகிக்கும்…
-
நெஞ்சின் ஆழத்தில் புதைந்த நினைவுகளின் நிழல்; சுழன்றடிக்கும் சூறாவளியாய் மனதினுள் வீசும் வலி. உன் பார்வை இதயத்தை எரிக்கிறது; வார்த்தைகளின் வெயிலில் உருகித்தான் போகிறேன் நான். மூச்சு சுடும் காதல் வலி கண்களின் வழியே கசியும்; சொல்ல முடியாத வரிகளாய் காதல் ரணங்கள். பிரிவு என்னும் வார்த்தையில் நின்று போன என் நிமிடங்கள்; என்னைச்சுற்றி உன் சுவாசப்பந்து, மூச்சுத் திணறுகிறேன். நிசப்த இரவுகளில் தீண்டலின்றி தொட்டு விடும் நினைவுகள்;…
-
இணைய தளத்தில், தலித்துகள் தனியாக வினையாற்ற வேண்டும் என்ற சர்ச்சைகள் அடங்கிய நேரம், வீட்டில் தலித்துகள் குறித்த பேச்சு எழுந்தது. ‘எப்படி இருந்தாலும் புத்திய காட்டிடுவாங்க’ என்று தலித்துகளை குறித்து பேசிய நண்பர், தான் ஒரு ஒரு ஜாதி இந்து என வெளிப்படையாக காட்டிக் கொள்பவர். ‘எப்படி இருந்தாலும் புத்திய காட்டிடுவாங்க’ என்ற சொற்றொடரைஇதற்கு முன் பலமுறை கேட்டும், சிலமுறை நானும் பயன்படுத்தியுள்ளேன். அவை எல்லாம் பார்ப்பனர்களை குறித்து. …
-
இந்திரா காந்தி 1975 ஆம் ஆண்டு கொண்டுவந்த நெருக்கடி நிலைக் காலத்தில்தான் அகில இந்திய தலைவர்கள் பலரைப்பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது. சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்களை ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஒருங்கிணைத்தார். அதுவரை சிதறிக்கிடந்த எதிர்க்கட்சிகளை சிறையிலேயே ஒருங்கிணைத்து ஜனதாக் கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கினார். தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையிலான அரசு இருந்ததால் நெருக்கடி நிலையின் வெப்பம் இங்கே தடுக்கப்பட்டது. அன்றைய தமிழ் செய்தித் தாள்களில்தான் வடக்கே நடப்பவைகள் தணிக்கையின்றி…
-
திமுக உதயமான சமயத்தில், தந்தை பெரியாருக்கும் அண்ணாவுக்கும் கலைஞர் அறிமுகமாகி சில ஆண்டுகள்தான் ஆகியிருந்தன. மற்ற தலைவர்களை விட கலைஞர் மிகவும் இளைஞராக இருந்தார். 1946 ஆம் ஆண்டுதான் பெரியாரை கலைஞர் முதன்முதலில் சந்தித்தார் என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும். அப்போது அவருடைய வயது 22 தான். தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கிய ஆண்டுக்கு முந்தைய ஆண்டுதான், அதாவது, 1924 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம்…
-
தஞ்சை பெரியகோயிலும் சிவன் உருவமும் அண்மையில் தாய்லாந்து நாட்டில் நடுகல்லாக நிறுவப்பட்டிருக்கிறது. அது இரண்டாம் உலகப் போர்க் காலம். அப்போது, தாய்லாந்து நாட்டின் பெயர் சயாம். இன்றைய மியான்மர், அன்றைய பர்மா. இரண்டு நாடுகளுக்குமிடையே ரயில் பாதை அமைக்கத் திட்டமிட்டது ஜப்பான். ஹிட்லரின் ஜெர்மனி, முசோலினியின் இத்தாலி ஆகிய நாடுகளுடன் ஜப்பானும் கூட்டு சேர்ந்து இங்கிலாந்து-பிரான்ஸ்-அமெரிக்கா நாடுகளைத் தாக்கி வந்தன. போரின் தொடக்கக் கட்டத்தில் ஹிட்லர் கூட்டணியின் கை ஓங்கியிருந்த…
-
யுடியூப்பில் விரும்பிப் பார்க்கும் பாடல்களில் ஒன்று காதல் கோட்டையில் வரும் நலம் நலமறிய ஆவல். நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பார்த்த பொழுது, இன்லேண்ட் லெட்டரை தேவயானி கைகளில் ஏந்தி அதற்கு முத்தமிட்ட பொழுது நினைவுகள் பல ஆண்டுகளுக்கு முன்னர் சென்று விட்டது. ஈமெயில், அலைபேசி மட்டுமில்லை, தொலைபேசி கூட எல்லோர் வீட்டிலும் இல்லாத காலத்தில் inland லெட்டர் தான் அனைத்துமாக இருந்தது. எங்கள் வீட்டிற்கு வரும் inland…
-
உலக பத்திரிகை சுதந்திர நாள் என்றால், ஒரு பத்திரிகையாளனாக எனக்கு சந்தோஷம்தான் ஏற்பட வேண்டும். அப்படியெல்லாம் இல்லை. பத்திரிகை சுதந்திரம் குறித்து 1975 காலகட்டத்தில்தான் எனக்கு புரிபடத் தொடங்கியது. ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிகைகள் என்று அரசியல் சாசனம் கூறுகிறது. இப்போது பத்திரிகைகள் என்பதைத் தாண்டி காட்சி ஊடகங்களும் இணைந்துள்ளன. ஆனால், ஒரு பத்திரிகையாளனாக நான் வெட்கப்படுகிறேன். இன்றைய பத்திரிகைகளும், காட்சி ஊடகங்களும் செயல்படும் விதம் எரிச்சலை ஏற்படுத்துகிறது. நேர்மையாக…
















